நீ சுயஇன்பம் அனுபவித்ததை உலகமே பார்த்துவிட்டது: நடிகையை அதிர வைத்த பாட்டி
Recommended Video
மும்பை: சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியை பார்த்து தனது பாட்டி என்ன சொன்னார் என்பதை தெரிவித்துள்ளார் நடிகை கியாரா அத்வானி.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. அவர் நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸில் சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்தார்.
அந்த காட்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கியாரா கூறியதாவது,
லஸ்ட் ஸ்டோரீஸ்

பாட்டி
அந்த சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியை நான் என் பாட்டியுடன் சேர்ந்து பார்த்தேன். என் பெற்றோரும் பார்த்தார்கள். அவர்களுக்கு என் நடிப்பு பிடித்திருந்தது. நான் லஸ்ட் ஸ்டோரீஸில் நடிக்க ஒப்புக் கொண்டபோதே இது போன்ற காட்சி உள்ளது என்று என் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

புரியவில்லை
சுயஇன்பம் காட்சி வந்தபோது என் பாட்டி எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் பார்த்தார். அவர் ஆங்கிலோ இந்தியர் என்பதால் அவருக்கு சில ஜோக்குகள் புரியவில்லை. அதனால் சப்டைட்டிலுடன் பார்த்தார். பாட்டி ரியாக்ஷனே காட்டாததால் அவருக்கு என் நடிப்பு பிடித்ததா இல்லையா என்பதே தெரியவில்லை.

கியாரா அத்வானி
நான் நடித்த அந்த காட்சிகளை பார்த்தீர்களே, உங்களுக்கு புரிந்ததா என்று பாட்டியிடம் கேட்டேன். ஒட்டு மொத்த குடும்பத்திற்கு முன்பு சுயஇன்பம் அனுபவித்தது புரிந்ததா என்று கேட்டேன். அதற்கு பாட்டியோ, தற்போது மொத்த உலகத்திற்கு முன்பும் அனுபவித்துள்ளாய் என்றார். அவரின் பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்கிறார் கியாரா.

அர்ஜுன் ரெட்டி
கியாரா அத்வானி அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங்கில் ஹீரோயினாக நடித்துள்ளார். விஜய் தேவரகொண்டா கதாபாத்திரத்தில் ஷாஹித் கபூர் நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் ரெட்டி தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். அடுத்த மாதம் வெளியாகும் கபிர் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











