Don't Miss!
- Sports சாஹலின் மனைவியா இது? நீச்சல் குளத்தில் நண்பருடன் ஜாலி குளியல்.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன?
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிவப்பு மையால் கருணாநிதி எழுதிய 'அந்த 2' வார்த்தைகள்: எஸ்.ஏ. சி. நெகிழ்ச்சி
சென்னை: சிவப்பு மையால் கருணாநிதி எழுதிய அந்த இரு வார்த்தைகள் குறித்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் கருணாநிதி பற்றி இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியதாவது,
நான் கருணாநிதியை எப்பொழுதுமே கலைஞராகவே பார்த்துள்ளேன். அவரிடம் அரசியல் பற்றி பேசியதே இல்லை. அவரை 1983ம் ஆண்டு முதன்முதலாக பார்த்தேன். அதில் இருந்து அவரை அண்ணா என்றே அழைத்து வந்தேன்.
அவர் என் 3 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். வசனங்களை பச்சை மையால் எழுதிவிட்டு நினைத்தால் மாத்திக்கொள்ளலாம் என்று சிவப்பு மையால் எழுதி அனுப்புவார். அந்த அளவுக்கு இயக்குனர்களுக்கு மரியாதை அளித்தவர் அவர்.
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று அவர் கூறியது வெறும் பேச்சுக்கு அல்ல. 1980களில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்தே நீதிக்கு தண்டனை படத்தை எடுத்தேன் என்றார்.