Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வரலட்சுமியிடம் சில்மிஷம் செய்த டிவி சேனல் நிர்வாகி: சரத்குமார் ட்வீட்டியது என்ன?
சென்னை: தனது மகள் வரலட்சுமியிடம் ஒருவர் சில்மிஷம் செய்துள்ள நிலையில் நடிகர் சரத்குமார் பெண்கள் பற்றி ட்வீட் செய்துள்ளார்.
நடிகை பாவனா படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு 2 மணிநேரம் மானபங்கப்படுத்தப்பட்டார். இதனால் சக நடிகைகள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
வரலட்சுமி
பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு தலைவர் தன்னிடம் தவறாக பேசி சில்மிஷம் செய்ததாக வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பின்னணி
வரலட்சுமியின் தந்தை சரத்குமார் பெரிய நடிகர், நடிகர் சங்க தலைவராக இருந்தவர். வரலட்சுமியின் சித்தியான நடிகை ராதிகா பெரிய திரை தவிர்த்து சின்னத்திரையிலும் பெரிய ஆள். அப்படி இருந்தும் ஒருவர் வரலட்சுமியிடம் இப்படி நடந்துள்ளார்.
— R Sarath Kumar (@realsarathkumar) February 23, 2017 |
சரத்குமார்
பெண்ணை அவமதிக்கும்போது எல்லாம் ஒருவர் ஆணாக இருக்க தகுதியில்லாதவராக ஆவதாக சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
சரி
சரத்குமாரின் ட்வீட்டை பார்த்த ஒருவர் சரியாக சொன்னீர்கள் என பதில் அளித்துள்ளார்.