Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
வரலட்சுமியிடம் சில்மிஷம் செய்த டிவி சேனல் நிர்வாகி: சரத்குமார் ட்வீட்டியது என்ன?
சென்னை: தனது மகள் வரலட்சுமியிடம் ஒருவர் சில்மிஷம் செய்துள்ள நிலையில் நடிகர் சரத்குமார் பெண்கள் பற்றி ட்வீட் செய்துள்ளார்.
நடிகை பாவனா படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு 2 மணிநேரம் மானபங்கப்படுத்தப்பட்டார். இதனால் சக நடிகைகள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
வரலட்சுமி
பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு தலைவர் தன்னிடம் தவறாக பேசி சில்மிஷம் செய்ததாக வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பின்னணி
வரலட்சுமியின் தந்தை சரத்குமார் பெரிய நடிகர், நடிகர் சங்க தலைவராக இருந்தவர். வரலட்சுமியின் சித்தியான நடிகை ராதிகா பெரிய திரை தவிர்த்து சின்னத்திரையிலும் பெரிய ஆள். அப்படி இருந்தும் ஒருவர் வரலட்சுமியிடம் இப்படி நடந்துள்ளார்.
— R Sarath Kumar (@realsarathkumar) February 23, 2017 |
சரத்குமார்
பெண்ணை அவமதிக்கும்போது எல்லாம் ஒருவர் ஆணாக இருக்க தகுதியில்லாதவராக ஆவதாக சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
சரி
சரத்குமாரின் ட்வீட்டை பார்த்த ஒருவர் சரியாக சொன்னீர்கள் என பதில் அளித்துள்ளார்.