Don't Miss!
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நம்ம சொன்னதை தான் விஷால், ஐசரி கணேஷிடம் ஆளுநரும் சொல்லியிருக்கிறார்
சென்னை:மக்கள் சொன்னதை தான் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணியிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலை வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் தேர்தலில் பல குளறுபடிகள் இருப்பதாகக் கூறி அதை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.
முன்னதாக எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதையடுத்து பாண்டவர் அணியை சேர்ந்த விஷால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். மேலும் தேர்தல் தொடர்பாக பாண்டவர் அணி சென்னை உயர் நீதிமன்றத்தை இன்று அணுகியுள்ளது.
இந்நிலையில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் ஆளுநரை சந்தித்தனர். இந்நிலையில் இது குறித்து சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேட்டி அளித்துள்ளார்.
ஆபாச படங்களை வெளியிடுவேன் என மிரட்டுகிறார்: முன்னாள் காதலர் மீது நிலானி புகார்
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விஷாலின் பாண்டவர் அணியை சேர்ந்தவர்கள் ஆளுநரை சந்தித்தனர். அதனால் நாங்களும் அவரை சந்தித்து பேசினோம். நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு கொடுத்தோம். நடிகர் சங்க தேர்தலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆளுநர் எங்களிடம் தெரிவித்தார்.
பாண்டவர் அணி பொய்யாக சொல்லி வருகிறது. அந்த அணியில் ஒற்றுமை இல்லை. நடிகர் சங்கத்தில் பிரச்சனை ஏற்பட நந்தா மற்றும் ரமணா ஆகியோர் தான் காரணம். நடிகர் சங்கம் பிளவுபட்டதற்கு விஷால் மட்டும் அல்ல நாசர் மற்றும் கார்த்தி ஆகியோரும் காரணம் என்றார்.
நீதிமன்றத்தை அணுகியுள்ள விஷால் வாய்மை வெல்லும், நல்லது நடக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். பாண்டவர் அணியினர் சுவாமி சங்கரதாஸ் அணியை ராதாரவி அணி என்றே அழைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக பாண்டவர் அணியும், சுவாமி சங்கதராஸ் அணியும் மாறி மாறி ஆளுநரை எதற்காக சந்திக்க வேண்டும். அவர் என்ன பண்ணுவார் என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்று ஆளுநரே தெரிவித்துள்ளார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!