சவுந்தர்யா, விசாகனுக்கு வைகோ கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயாலாளர் வைகோ அளித்த பரிசுப் பொருள் என்ன தெரியுமா?
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் நேற்று நல்லபடியாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் தான் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளார் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சவுந்தர்யாவுக்கும், விசாகனுக்கும் ஆளுக்கு ஒரு திருக்குறள் தெளிவுரையை பரிசாக அளித்துள்ளார் வைகோ. அவர் அந்த பரிசை அளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
மாப்பிள்ளை விசாகன் புன்னகையுடன் திருக்குறளை பெற்றுக் கொண்டுள்ளார். சவுந்தர்யா, விசாகனின் திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











