இயக்குநர் சேரன் எங்கே... என்னாச்சி அந்த சி2எச் திட்டம்?
கடைசியாக இயக்குநர் சேரனைப் பார்த்தது.. ஒரு திருமண விழாவில்தான். சினிமா நிகழ்ச்சிகளில் அவரைப் பார்க்கவே முடிவதில்லை.
சினிமா செய்தியாளர்களுக்கு இந்த நிலை என்றால், அவரை நம்பி சி2எச் நிறுவனத்தில் சிடி விற்க முதலீடு செய்தவர்கள் நிலையோ பரிதாபம்... அவரைப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டனவாம்.

'ஜே கே. எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் சிடிக்கள் பத்துலட்சத்துக்கும் மேல் விற்பனையாக பெரும் வெற்றி அடைந்துவிட்டதாக விளம்பரமெல்லாம் கொடுத்த சேரன், அதன் பிறகு வேறு எந்தப் படத்தையும் சி2எச் மூலம் வெளியிடவே இல்லை.
‘ஜே.கே'வுக்குப் பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு புதுப்படத்தை வெளியிடப் போவதாகவும், அதற்காக 50 படங்களைத் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலும், அவரைத் தொடர்பு கொள்ள முடியாமலும் அவரை நம்பி முதலீடு செய்தவர்கள் தேடிக் கொண்டிருப்பதாக கோலிவுட் பரபரக்கிறது.
சேரன் தொடங்கியது நல்ல முயற்சி.. அதை முழுமையாக முடிப்பார் என இன்னமும் நம்புகிறோம். பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











