Don't Miss!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- News புதிய ரேஷன் கார்டுகள் எப்போது.. காத்திருக்கும் 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்..தமிழக அரசுக்கு கோரிக்கை
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஐஸ்வர்யா ராய், தீபிகா இடையே இருக்கும் அந்த '3' ஒற்றுமை: சொல்கிறார் இயக்குனர் பன்சாலி
மும்பை: நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோனே இடையேயான ஒற்றுமை குறித்து பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தீபிகா படுகோனேவை வைத்து ராம் லீலா மற்றும் பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்களை அடுத்தடுத்து எடுத்தார். அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. இரண்டு படங்களின் ஹீரோவும் ரன்வீர் சிங் தான்.
இந்நிலையில் பன்சாலி ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா பற்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் எனக்கு கற்பனையை அளிப்பவர். அவரது கண்ணை பார்த்தால் போதும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்வார். அவர் ஒரு சிறப்பான நடிகை.
தீபிகா
ஒரு நடிகையாக தீபிகா வளர்ந்துவிட்டார். அவர் போன்று என் படங்களில் வேறு யாரும் நடித்திருக்க முடியாது. அதிலும் மஸ்தானி மிகவும் ஸ்பெஷலானது.
ஒற்றுமை
ஐஸ்வர்யா, தீபிகாவுக்கு இடையேயான ஒற்றுமை பற்றி சொல்வது என்றால், ஒருவர் என்னுடன் 3 படங்கள் பண்ணியுள்ளார், மற்றொருவர் 2 படங்களில் நடித்துள்ளார். இருவருமே அழகானவர்கள். இருவருமே மங்களூரை சேர்ந்தவர்கள். இருவருமே என் தோழிகள்.
கரீனா
ராம் லீலா படத்தில் கரீனா கபூர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு துவங்க 10 நாட்கள் இருக்கையில் அவர் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதையடுத்து நான் தீபிகாவை பார்க்க சென்றேன். அவர் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.