Don't Miss!
- News நிர்மலா கிட்ட காசு இல்லை.. அப்ப தமிழிசையிடம் பணமிருக்கா? நிதியமைச்சர் மீது பாய்ச்சல்? யார்னு பாருங்க
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஐஸ்வர்யா ராய், தீபிகா இடையே இருக்கும் அந்த '3' ஒற்றுமை: சொல்கிறார் இயக்குனர் பன்சாலி
மும்பை: நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோனே இடையேயான ஒற்றுமை குறித்து பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தீபிகா படுகோனேவை வைத்து ராம் லீலா மற்றும் பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்களை அடுத்தடுத்து எடுத்தார். அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. இரண்டு படங்களின் ஹீரோவும் ரன்வீர் சிங் தான்.
இந்நிலையில் பன்சாலி ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா பற்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் எனக்கு கற்பனையை அளிப்பவர். அவரது கண்ணை பார்த்தால் போதும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்வார். அவர் ஒரு சிறப்பான நடிகை.
தீபிகா
ஒரு நடிகையாக தீபிகா வளர்ந்துவிட்டார். அவர் போன்று என் படங்களில் வேறு யாரும் நடித்திருக்க முடியாது. அதிலும் மஸ்தானி மிகவும் ஸ்பெஷலானது.
ஒற்றுமை
ஐஸ்வர்யா, தீபிகாவுக்கு இடையேயான ஒற்றுமை பற்றி சொல்வது என்றால், ஒருவர் என்னுடன் 3 படங்கள் பண்ணியுள்ளார், மற்றொருவர் 2 படங்களில் நடித்துள்ளார். இருவருமே அழகானவர்கள். இருவருமே மங்களூரை சேர்ந்தவர்கள். இருவருமே என் தோழிகள்.
கரீனா
ராம் லீலா படத்தில் கரீனா கபூர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு துவங்க 10 நாட்கள் இருக்கையில் அவர் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதையடுத்து நான் தீபிகாவை பார்க்க சென்றேன். அவர் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.