Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பெண்கள் குறித்து பாசிட்டிவாக சிந்தித்த தூரிகை..ஏன் இந்த திடீர் முடிவு?
சென்னை : பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து மண்ணின் முக்கியத்துவத்தை கவிதை நடையில் பேசியிருந்தார்.
பாய்ஸ், கில்லி, பேரழகன், அந்நியன், சந்திரமுகி, போக்கிரி, வேட்டைக்காரன், சுறா, காவலன், கோ, வெடி, ஏழாம் அறிவு, அட்டகத்தி, மரியான், மெட்ராஸ், ஐ, திரிஷா இல்லனா நயன்தாரா, கபாலி போன்ற பலபடங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் பிளாக் பஸ்டர் அடிக்கும்..டிரைலரை பார்த்து பாராட்டிய சூர்யா!
தூரிகை கபிலன்
இந்நிலையில், கவிஞர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சற்று முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை., தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பெண்ணாக பிறந்தது பெருமை
கபிலனின் மகள் தூரிகை, 2020ம் ஆண்டு ''பீயிங் வுமன்" எனும் இதழைத் தொடங்கினார். அந்த விழாவில் பா ரஞ்சித், இயக்குநர் கலந்து கொண்ட நிலையில், அந்த விழாவில் பேசிய துரிகை, நான் பெண்ணாக பிறந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். அதற்காகத்தான் ''பீயிங் வுமன்" என்ற பத்திரிக்கையை தொடங்கினேன்.இந்த பத்திரிக்க பெண்ணியம் பற்றிப் பேசுவதற்காகத் தொடங்கப்பட்டது அல்ல. பெண்களுக்கு எதிராக நடக்கும் எதிர்மறைப் பக்கங்களை பெறுவதற்காகவும் அல்ல. பெண்கள் குறித்த அவர்களுடைய நேர்மறையான பக்கங்களை வெளிப்படுத்தவே இந்த பத்திரிகை.
பெண் முன்னேறி வருகிறார்கள்
பெண்கள் அனைத்து துறைகளில் சாதனை படைத்து முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்கள் எந்தத் துறையில் சாதனை புரிந்தார்கள், அவர்களுடைய திறமைகள் என்னென்ன, ஒரு பெண் மீது ஈர்ப்பு இருக்க காரணம் என்ன. என்பது போன்ற முழுக்க முழுக்க பெண்களின் நேர்மறைகளைப் பற்றி மட்டுமே இந்த பத்திரிகையில் எழுத போகிறேன். சுருக்கமாக சொல்லப்போனால், பெண்களைக் கொண்டாடுவதற்குத் தான் இந்த பத்திரிகை என்று பெண்மையை வெகுவாக புகழ்ந்து பேசியிருந்தார்.
ஏன் இந்த திடீர் முடிவு
இப்படி பெண்கள் குறித்து ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு கபிஞரின் மகள் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. தற்கொலை என்பது ஒரு நொடிப்பொழுதில் ஒருபுத்திசாலி எடுக்கும் முட்டாள் தனமாக முடிவாகும். இந்த எண்ணம் மனதிற்குள் லேசாக எழும் போதே அதற்கு சமாதி கட்டிவிடுங்கள்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!