twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களுக்குக் காமம் அதிகமாம்... சொல்கிறது 'குற்றாலம்'..!

    By Sudha
    |

    Kutralam Movie
    ஒரு காலத்தி்ல உயிர் என்ற பெயரில் ஒரு படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொழுந்தன் மீது ஆசைப்பட்ட அண்ணியின் கதை. இந்தப் படத்தை சாமி இயக்கியிருந்தார். பிறகு அவரே மறுபடியும் ஒரு வில்லங்கப் படத்தை இயக்கியிருந்தார். சிந்துசமவெளி என்று பெயரிடப்பட்ட அதில் மருமகள் மீது ஆசைப்படும் மாமனாரின் கதையை சொல்லியிருந்தார்.

    இந்த வகையில் இப்போது மீண்டும் ஒரு வில்லங்கமான படமாக உருவாகி வருகிறதாம் குற்றாலம் என்ற படம். சஞ்சய் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் இது. முதலில் இதற்கு அவர்கள் வைத்த பெயர் ரோசா. பின்னர்தான் இதை குற்றாலம் என்ற பெயரில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்தப் படத்தின் கதையே படு வில்லங்கமானதாக இருக்கிறதாம். அதாவது இப்படத்தில் நாயகிகளாக நடிக்கும் மீனு கார்த்திகாவும், செளகந்தியும் அக்கா, தங்கச்சியாம். படத்தின் கதைப்படி அக்காவுக்கு, தங்கச்சி புருஷனுடன் கள்ளத் தொடர்பு இருக்கிறதாம். இது தங்கச்சிக்கும் தெரியுமாம்.

    இந்தக் காட்சியைத்தான் சமீபத்தில் குற்றாலத்தில் படமாக்கினார்களாம். காட்சியமைப்பைப் பார்த்து படக் குழுவினரை அதிர்ந்து போயுள்ளனராம். வில்லங்கமான சீனா இருக்கே என்று இயக்குநரிடம் குழுவினர் கேட்டபோது, பெண்களுக்குத்தான் ஆண்களை விட காம உணர்வு அதிகம். மேலும் இப்படிப்பட்ட காட்சிகள் வீடுகளில் இருக்க்த்தானே செய்கிறது. அதைத்தானே படம் பிடிக்கிறேன் என்றாராம்.

    இந்தப் படம் என்னவெல்லாம் வில்லங்கத்தைக் கொண்டு வரப் போகிறதோ என்ற அச்சம் இப்பவே கிளம்பியிருக்கிறதாம்!

    English summary
    Kutralam movie story is the talk of the Kollywood. Sources say that this movie will create tension among the film buffs like Uyir and Sindhu Samaveli.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X