Don't Miss!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தவங்க என்ன சொன்னாங்க? கமலிடம் போட்டுடைத்த ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பழைய போட்டியாளர்கள் தங்களிடம் கூறியது என்ன என்பது குறித்து பளீச்சென போட்டுடைத்தனர் ஹவுஸ்மேட்ஸ்.
பிக்பாஸ் வீட்டுக்குள் கடந்த வாரம் முழுவதும் எவிக்ட்டான பழைய போட்டியாளர்கள் வந்தனர். இதனால் பிக்பாஸ் வீடே ஆட்டம் பாட்டம், டாஸ்க்குகள் என களைக்கட்டியது.
வந்த போட்டியாளர்கள் பழைய சீசன்களை போன்று இல்லாமல் வெளியே என்ன நடக்கிறது? யாரைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை விலாவரியாக கூறினர்.
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
என்ன சொன்னார்கள்?
அதனைக் கேட்டதில் இருந்து பாலாஜி, ரியோ, ரம்யா ஆகியோர் பெரும் சோகத்துடன் உள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த கமல் வெளியே இருந்து வந்த உங்களின் பழைய நண்பர்கள் என்ன கூறினார்கள்? சிலர் ரொம்ப சோகமாக இருக்கிறீர்களே என்றார்.
பேக் டூ ஃபார்ம்
கமல் கூறியதைக் கேட்டு முதல் நபராய் பேச ஆரம்பித்த ரம்யா பாண்டியன், உள்ளே வந்தவர்கள் வெளியே நடக்குறதை எல்லாம் கூறியதும் ரொம்பவே அப்செட்டாக இருந்தது. ஆனால் சம்யுக்தா வந்த பிறகு ஹேப்பியா இருந்துச்சு. அவங்க பாஸிட்டிவா பேசினாங்க. அதனால பேக் டூ ஃபார்ம் என்றார்.
அப்ஸ் அன்ட் டவுன்ஸ்
தொடர்ந்து பேசிய பாலாஜி, ஹேப்பியா இருந்துச்சு சர்ப்ரைஸாக இருந்துச்சு. உள்ளே வந்தவர்கள் சொன்ன சில விஷயங்களை கேட்டு கஷ்டமா இருந்துச்சு. கொஞ்சம் டவுன் ஆனேன். நிறைய அப்ஸ் அன்ட் டவுன்ஸ் இருக்கும் அதுதானே வாழ்க்கை.. அதனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.
இயல்பு தன்மைய பாதிச்சுருச்சு..
பின்னர் பேசிய ஆரி, நாலு அஞ்சு பேர பார்க்கும் போது ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு. அதோட அப்டேட் ஆகாம இருக்குறது எவ்ளோ நல்லதுன்னு தோனுச்சு. அவர்கள் கூறிய சில விஷயங்கள் மன அழுத்தத்தை கொடுத்தது. என்னுடைய இயல்பு தன்மைய பாதிச்சுருச்சு என்றார்.
கேபி இல்லாததுதான் சோகம்
அடுத்து பேசிய சோம், ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு. எல்லாரும் ஒவ்வொரு நாளா வந்தாங்க. அப்புறம் தினமும் ஒரு வீடியோ போட்டாங்க. ஹேப்பி மொமென்ட்ஸ், சோகம், சண்டை என எல்லாவற்றையும் போட்டாங்க. இதில் கேபி போனதுதான் சோகமா இருந்துச்சு. கேபி இந்த செலிபிரேஷனின் போதெல்லாம் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
தம்பியா இருப்பியா?
தொடர்ந்து பேசிய ரியோ, எல்லோரும் வந்தது ஹேப்பியா இருந்துச்சு. ஆனால் அவங்க பேச பேச ஒரு மாதிரி கஷ்டமா ஆயிடுச்சு. நிஷாவும் அர்ச்சனாவும் பேசியதை பார்க்கும் போது அவர்கள் என்னை நம்பவில்லை என்று தோன்றியது. வெளியே வந்து தம்பியா இருப்பியா என்று கேட்டார்கள். அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு என்றார்.
அதுல என்ன கஷ்டம்?
இதனைக் கேட்ட கமல், இதுல என்ன கஷ்டம் உங்களுக்கு.. நீங்க உண்மையாதான இருந்தீங்க.. எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி இருக்க வேண்டும் என்றால் ஐஸ் தான் விற்க வேண்டும். அதுவும் பல் வலி காரனுக்கு பிடிக்காது. எல்லாவற்றிலும் பங்கேற்றாலே போதும் என்று அறிவுரை கூறினார் கமல்.