Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது 'வாட்ஸ் அப்’.... விவேக் 'வார்னிங்'!
சென்னை: பைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது, சமுக பொறுப்பில்லாதவர்கள் இயக்கும் வாட்ஸ் அப். இதனால் உள்நாட்டு கலவரத்துக்கே வாய்ப்பு உள்ளது என கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் விவேக்.
காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் நடிகர் விவேக். தற்போது இவர் பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் விவேக்கின் ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் தாண்டி மரம் வளர்த்தல் உள்ளிட்ட சமூக விசயங்களிலும் பங்கேற்று வருகிறார் விவேக்.
இந்நிலையில், விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக வலைதளங்களின் ஆபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
|
ஆபத்தானது...
பைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது,சமுக பொறுப்பில்லாதவர்கள் இயக்கும் வாட்ஸ் அப்.உள்நாட்டு கலவரத்துக்கே வாய்ப்பு உள்ளது.
கலவரத்துக்கே வழி வகுக்கும்...
இன, மத கலவரங்களுக்கே வழி வகுக்கும். நான் சொல்வது உண்மை என்பது சில பேருக்கு தாமதமாய் புரியும்.
வாட்ஸ் அப் மூடப்படலாம்...
இருட்டில் இருந்து கொண்டு கல் எறியும் சில ஆண்மை அற்ற கோழைகளால், கூடிய விரைவில் வாட்ஸ் அப் இழுத்து மூடப்படலாம். (சீனா போல)
நல்லதை மட்டுமே பகிர வேண்டும்...
வாட்ஸ் அப் மட்டுமல்ல நான் சொன்னது முக நூல் டுவிட்டர்கும் பொருந்தும். மத ஒற்றுமை, இன இணக்கம்,நல்லறிவு இவற்றை மட்டும் பகிர வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.