'சினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன?'
கொஞ்சம் ஷாக்காதான் இருக்கும். ஆனால் மேட்டர் நீங்க நினைப்பதல்ல.
இன்று காலை நாளேடுகளை புரட்டியதும் பலரும் அக்கறையோடு 'இப்போதானே கல்யாணம் ஆச்சு... அதுக்குள்ள ஏன் இப்படியொரு செய்தி அபசகுனமா?' என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால் இது நிஜமான பிரிவல்ல... 'விளம்பரம்'!
பிரசன்னாவும் சினேகாவும் சேர்ந்து ஒரு செல்போன் கம்பனிக்கான விளம்பரப் படத்தில் நடித்தனர். அதில் வரும் டயாலாக் இது. புதுசா திருமணமானவர்களைப் பிரித்து ஆடி மாசம் பெண் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
அதே போல் இப்போ புதுசா கல்யாணமான சினேகா - பிரசன்னாவை பிரிக்கிறதாம் இந்த ஆடிமாசம்.
அந்த பிரிவே தெரியாம இருக்க 'எங்ககிட்ட போன் வாங்கி சேர்ந்து இருங்க' என்று சொல்கிறது அந்த விளம்பரம்.
திருமண வீடியோவை விற்று காசு பார்த்தாச்சு... அடுத்து பிரிவு என்ற விஷயத்தையும் விளம்பரமாக்கி பணம் பார்த்திருக்கிறது இந்த புது ஜோடி.. பலே ஜோடிதான்!
Comments


Click it and Unblock the Notifications
