நடிகர் அஜீத் டாக்டர் அஜீத் ஆன கதை: சொல்கிறார் சிவா
சென்னை: அஜீத் குமார் நடிகர் அல்ல டாக்டர் என்று வீரம் பட இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.
அஜீத் குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. படத்தில் அஜீத் பாசமுள்ள அண்ணனாக நடிக்கிறார்.
இந்நிலையில் வீரம் படப்பிடிப்பின்போது நடந்த சம்பவம் ஒன்று பற்றி சிவா விவரித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில்
சுவிட்சர்லாந்தில் வீரம் படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது பயன்படுத்தப்பட்ட விளக்குகளால் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு கண் அலர்ஜி ஏற்பட்டு அவதிப்பட்டனர் என்றார் சிவா.

என்ன அக்கறை!
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்த அஜீத் ஒவ்வொருவரின் அறைக்கும் சென்று அவர்களின் கண்களில் மருந்து போட்டுவிட்டு வந்தார். அவரது அக்கறையை பார்த்த படக்குழுவினர் உருகிவிட்டனர் என்று சிவா தெரிவித்தார்.

டாக்டர் அஜீத்
படக்குழுவினரின் நலனில் அக்கறை வைத்து அவர்களுக்கு மருந்து கொடுத்த அவர் நடிகர் அஜீத் அல்ல டாக்டர் அஜீத் என்று சிவா பெருமிதம் கொண்டார்.

அஜீத் அறிவுரை
விதியுலேகா ராமன் ஜில்லா, வீரம், மாலினி 22 பாளையங்கோட்டை என்று தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வீரம் படப்பிடிப்பில் விதியுலேகாவிடம் பேசிய அஜீத் ஓவராக உழைத்து உடல்நலத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











