Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மோடியால் சிங்கார சென்னையில் சிங்கிள் டீக்கு சிங்கியடித்த பாடகி சின்மயி!
சென்னை: சிங்கிள் டீ வாங்கிக் குடிக்க சில்லறை இல்லாமல் அல்லாடிய பாடகி சின்மயி மற்றும் அவரின் கணவர் ராகுலுக்கு ஏடிஎம் மைய வாட்ச்மேன் ரூ.20 கொடுத்து உதவியுள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால் பலரும் சில்லறை இல்லாமல் அல்லாடுகிறார்கள். பால், காய்கறி வாங்கக் கூட சில்லறை இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.
அந்த பிரச்சனை பாடகி சின்மயி மற்றும் அவரது கணவர் நடிகர் ராகுலுக்கும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சின்மயி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சில்லறை
மோடி கறுப்பு பணத்தை ஒழிக்க அறிவிப்பு வெளியிட்டபோது நாங்கள் அமெரிக்காவில் இருந்தோம். இந்தியா வந்ததும் செலவுக்கு கையில் சில்லறை இல்லை.
ஏடிஎம்
உள்ளூர் டீக்கடையில் டீக்குடிக்க 100 ரூபாயாவது எடுக்க கணவர் ஏடிஎம் மையத்திற்கு சென்றார். ஏடிஎம் எந்திரத்தில் காலை 10 மணிக்கு பணம் போடப்பட்டது ஆனால் அது 2 மணிநேரத்திலேயே தீர்ந்துவிட்டது என்று அங்கிருந்த காவலாளி தெரிவித்தார்.
ரூ. 20
எங்கள் கையில் பணம் இல்லாத நேரத்தில் டீ குடிக்க ஏடிஎம் மைய காவலாளி 20 ரூபாய் கொடுத்தார். நம்மில் பலருக்கு நல்ல இதயம் உள்ளது என சின்மயி தெரிவித்துள்ளார்.
|
டெபிட் கார்டு
சின்மயி ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்டை பார்த்த ஒருவர் உங்களிடம் இருக்கும் டெபிட் கார்டை வைத்து எந்த ஹோட்டலிலும் உணவு சாப்பிடலாம் என்றார். அதை பார்த்த சின்மயி ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, எத்தனை உள்ளூர் டீக்கடைக்காரர்கள் டெபிட் கார்டுகளை ஏற்பார்கள் என்று சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.