Don't Miss!
- Finance உங்க வீட்டில் நாய் வளர்க்கிறீர்களா..? முதல்ல இதை படிங்க..!!
- Sports 6 பந்தில் 6 சிக்ஸ்.. யுவராஜ் சாதனையை சமன் செய்த திபேந்திரா சிங்.. அந்த தங்கத்த தூக்கிட்டு வாங்கடா!
- News இஸ்ரேல் பகிரங்க வார்னிங்! மத்திய கிழக்கில் ஹை டென்ஷன்.. ஈரான் கைப்பற்றிய கப்பலில் 17 இந்தியர்கள்?
- Automobiles ஷோரூம்களுக்கு வர தொடங்கிய கருப்பு அரக்கன்... கொம்பன் எறங்கீட்டான்னு கதறும் போட்டி நிறுவனங்கள்...
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேர்கோட்டில் வருவதால் இந்த 4 ராசிக்காரங்க பணக்கஷ்டத்தால் படாதபாடு படப்போறாங்களாம்...!
- Technology ரூ.8000 கம்மி.. அசல் விலையில் இருந்து.. அடிமாடு ரேஞ்சுக்கு இறங்கிய லேட்டஸ்ட் Oppo போன்.. என்ன மாடல்?
- Education தலித் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்த அம்பேத்கர்..!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
மோடியால் சிங்கார சென்னையில் சிங்கிள் டீக்கு சிங்கியடித்த பாடகி சின்மயி!
சென்னை: சிங்கிள் டீ வாங்கிக் குடிக்க சில்லறை இல்லாமல் அல்லாடிய பாடகி சின்மயி மற்றும் அவரின் கணவர் ராகுலுக்கு ஏடிஎம் மைய வாட்ச்மேன் ரூ.20 கொடுத்து உதவியுள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால் பலரும் சில்லறை இல்லாமல் அல்லாடுகிறார்கள். பால், காய்கறி வாங்கக் கூட சில்லறை இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.
அந்த பிரச்சனை பாடகி சின்மயி மற்றும் அவரது கணவர் நடிகர் ராகுலுக்கும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சின்மயி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சில்லறை
மோடி கறுப்பு பணத்தை ஒழிக்க அறிவிப்பு வெளியிட்டபோது நாங்கள் அமெரிக்காவில் இருந்தோம். இந்தியா வந்ததும் செலவுக்கு கையில் சில்லறை இல்லை.
ஏடிஎம்
உள்ளூர் டீக்கடையில் டீக்குடிக்க 100 ரூபாயாவது எடுக்க கணவர் ஏடிஎம் மையத்திற்கு சென்றார். ஏடிஎம் எந்திரத்தில் காலை 10 மணிக்கு பணம் போடப்பட்டது ஆனால் அது 2 மணிநேரத்திலேயே தீர்ந்துவிட்டது என்று அங்கிருந்த காவலாளி தெரிவித்தார்.
ரூ. 20
எங்கள் கையில் பணம் இல்லாத நேரத்தில் டீ குடிக்க ஏடிஎம் மைய காவலாளி 20 ரூபாய் கொடுத்தார். நம்மில் பலருக்கு நல்ல இதயம் உள்ளது என சின்மயி தெரிவித்துள்ளார்.
|
டெபிட் கார்டு
சின்மயி ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்டை பார்த்த ஒருவர் உங்களிடம் இருக்கும் டெபிட் கார்டை வைத்து எந்த ஹோட்டலிலும் உணவு சாப்பிடலாம் என்றார். அதை பார்த்த சின்மயி ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, எத்தனை உள்ளூர் டீக்கடைக்காரர்கள் டெபிட் கார்டுகளை ஏற்பார்கள் என்று சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.