Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சில்மிஷம் செய்தவன் சட்டை காலரை பிடித்து இழுத்து சப்புன்னு அறைந்த தீபிகா
Recommended Video
மும்பை: தன்னிடம் சில்மிஷம் செய்தவனை சட்டை காலரை பிடித்து கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார் நடிகை தீபிகா படுகோனே.
பாலிவுட்டின் வெற்றி நாயகியாக உள்ளார் தீபிகா படுகோனே. அவர் நடிப்பில் வெளியான பத்மாவத் படம் ஹிட்டாகியுள்ளது. படம் தொடர்பாக தீபிகாவுக்கு கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் தீபிகா கூறியிருப்பதாவது,
உணவகம்
எனக்கு 14 வயது இருக்கும்போது நான் என் குடும்பத்தாரோடு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சாலையோரம் நடந்து சென்றோம். அப்பாவும், தங்கையும் முன்னால் சென்றார்கள். நானும், அம்மாவும் அவர்கள் பின்னால் நடந்து சென்றோம்.
நான்
நானும், அம்மாவும் நடந்து சென்றபோது ஒருவன் வேண்டும் என்றே என்னை உரசிவிட்டு சென்றான். நான் நினைத்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல், அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போன்று இருந்திருந்திருக்கலாம்.
சில்மிஷம்
என்னிடம் சில்மிஷம் செய்தவனை பின்தொடர்ந்து சென்று அவன் சட்டை காலரை பிடித்து நடுத்தெருவில் வைத்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு வந்தேன்.
நம்பிக்கை
வம்பு செய்தவனை நான் அறைந்ததை பார்த்த என் பெற்றோருக்கு இனி இவள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை வந்தது. இனி எந்த சூழலிலும் மகள் சமாளித்துக் கொள்வாள் என்று அவர்கள் அப்போதில் இருந்து நம்பினார்கள்.
கால்
பத்மாவத் படம் தொடர்பாக என் மூக்கை வெட்டுவேன் என்று ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது. எனக்கு என் மூக்கு மிகவும் பிடிக்கும். என் பாதம் மிகவும் பெரிதாக உள்ளது. அதை வேண்டுமானால் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி சிரித்தார் தீபிகா.