Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சில்மிஷம் செய்தவன் சட்டை காலரை பிடித்து இழுத்து சப்புன்னு அறைந்த தீபிகா
Recommended Video
மும்பை: தன்னிடம் சில்மிஷம் செய்தவனை சட்டை காலரை பிடித்து கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார் நடிகை தீபிகா படுகோனே.
பாலிவுட்டின் வெற்றி நாயகியாக உள்ளார் தீபிகா படுகோனே. அவர் நடிப்பில் வெளியான பத்மாவத் படம் ஹிட்டாகியுள்ளது. படம் தொடர்பாக தீபிகாவுக்கு கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் தீபிகா கூறியிருப்பதாவது,
உணவகம்
எனக்கு 14 வயது இருக்கும்போது நான் என் குடும்பத்தாரோடு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சாலையோரம் நடந்து சென்றோம். அப்பாவும், தங்கையும் முன்னால் சென்றார்கள். நானும், அம்மாவும் அவர்கள் பின்னால் நடந்து சென்றோம்.
நான்
நானும், அம்மாவும் நடந்து சென்றபோது ஒருவன் வேண்டும் என்றே என்னை உரசிவிட்டு சென்றான். நான் நினைத்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல், அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போன்று இருந்திருந்திருக்கலாம்.
சில்மிஷம்
என்னிடம் சில்மிஷம் செய்தவனை பின்தொடர்ந்து சென்று அவன் சட்டை காலரை பிடித்து நடுத்தெருவில் வைத்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு வந்தேன்.
நம்பிக்கை
வம்பு செய்தவனை நான் அறைந்ததை பார்த்த என் பெற்றோருக்கு இனி இவள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை வந்தது. இனி எந்த சூழலிலும் மகள் சமாளித்துக் கொள்வாள் என்று அவர்கள் அப்போதில் இருந்து நம்பினார்கள்.
கால்
பத்மாவத் படம் தொடர்பாக என் மூக்கை வெட்டுவேன் என்று ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது. எனக்கு என் மூக்கு மிகவும் பிடிக்கும். என் பாதம் மிகவும் பெரிதாக உள்ளது. அதை வேண்டுமானால் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி சிரித்தார் தீபிகா.