Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கவுதமியை மனதில் வைத்து தான் ஸ்ருதி 'இப்படி' ட்விட்டரில் கூறியுள்ளாரா?
சென்னை: கவுதமி கமல் ஹாஸனை பிரிந்துள்ள நிலையில் ஸ்ருதி ஹாஸன் தனக்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமி கமல் ஹாஸனை திருமணம் செய்யாமல் அவருடன் 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் கமலை பிரிவதாக ட்விட்டர் மூலம் அறிவித்தார்.
கமலை பிரியும் முடிவு எடுத்ததை தன்னாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை என்கிறார் கவுதமி. அண்மையில் கவுதமிக்கும், ஸ்ருதிக்கும் இடையே மோதலாக இருந்தது என்று கூறப்பட்ட நிலையில் கவுதமி இந்த முடிவை எடுத்துள்ளார்.
கவுதமி தன் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி அறிவித்துள்ள நிலையில் ஸ்ருதி தனக்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஒருவருக்குள் ஏற்படும் மாற்றத்தை உணர்வது அருமையானது. ஒரு புதிய புரிதல், அந்த தருணம், புதிய கண்ணோட்டத்தின் துவக்கத்தை உணர்வது அருமை.
It's amazing to feel a change occur within oneself- a realisation a moment and the start of a completely new perspective #introspect #live
— shruti haasan (@shrutihaasan) October 31, 2016