Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சிம்பு திருமணம், இறைவன் இப்படி செய்துவிட்டானே?: கண்கலங்கிய டி.ராஜேந்தர்
Recommended Video
சென்னை: செய்தியாளர்கள் சந்திப்பின்போது சிம்புவுக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்க டி.ராஜேந்தர் கண் கலங்கிவிட்டார்.
டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசனுக்கும், நபீலாவுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நடந்த திருமண வரவேற்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
என்னாச்சு ஓவியா, அந்த அளவுக்கு உங்களுக்கு என்ன கஷ்டம்?
குறளரசன்
என் இளைய மகன் குறளரசனின் திருமணம் பெண் வீட்டில் வைத்து எளிமையாக நடந்தது. இதையடுத்து அவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. என் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
லதா
தன்னால் வர முடியாது என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே சொல்லி குறளரசனை அழைத்து வாழ்த்தியதோடு மட்டும் அல்லாமல் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்தை அனுப்பி வைத்தார். நிறைய பேரை அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அவர்களை அழைத்து பேச உள்ளேன். நானும், ரஜினிகாந்தும் ஆரம்பத்தில் நண்பர்கள். அவருக்கும், எனக்கும் இடையே நட்பு இருந்தது.
நன்றி
நான் பத்திரிகை வைத்தபோது எடுத்த புகைப்படங்களை வைத்து செய்தி வெளியிட்ட ஊடகத் துறையினர் அனைவருக்கும் நன்றி. தற்போது என் கண்கள் கலங்குவதற்கு மகிழ்ச்சி தான் காரணம். நான் சினிமாவில் மட்டும் காதலை ஆதரிப்பவன் அல்ல. நான் மதங்களை பார்ப்பவன் அல்ல சினிமாவில் மட்டும் சொல்பவன் இல்லை. என் சின்ன பையன் அவன் மனசுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்ய அனுமதித்தேன்.
பிள்ளைகள்
பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். திருமணம் என்று வந்துவிட்டால் தங்களுக்கு பிடித்தபடி தான் பிள்ளைகள் திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் நினைக்கக் கூடாது என்பது என் கருத்து.
சிம்பு
இறைவன் அருளால் சிம்புவின் திருமணம் விரைவில் நடக்கும். இது தான் எனக்கு பெரிய மனத்தாங்கலாக உள்ளது. இந்த கேள்வியை மீடியாக்கள் கேட்கும் அளவுக்கு இறைவன் வைத்துவிட்டானே என்று தான் மனத்தாங்கலாக உள்ளது. உங்கள் மீது வருத்தம் இல்லை. இறைவன் மற்றும் விதி மீது தான் வருத்தமாக உள்ளது என்று கூறி கண்கலங்கினார் டி.ராஜேந்தர்.