Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இளையராஜா விழாவில் சரிகாவின் கையை பிடித்த கமல், கண்கள் விரிய பார்த்த ஸ்ருதி
மும்பை: மும்பையில் இசைஞானி இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது முன்னாள் மனைவி சரிகாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
இசைஞானி இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளதை பாராட்டி மும்பையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பாலிவுட் இயக்குனர் ஆர். பால்கி ஏற்பாடு செய்த இந்த விழாவை நடிகர் அமிதாப் பச்சன் முன் நின்று நடத்தி வைத்தார்.
விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், அவரது மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சரிகா தனது மகள் ஸ்ருதி ஹாஸன் அருகே அமர்ந்திருந்தார். அவரை பார்த்ததும் கமல் ஹாஸன் புன்னகை புரிந்தபடி அவர் அமர்ந்திருந்த இடம் நோக்கி சென்றார். காதலித்து திருமணம் செய்து விவாகரத்தான தனது முன்னாள் மனைவியான சரிகாவின் அருகில் சென்ற கமல் அவரின் கையைப் பிடித்து பாசமுடன் நலம் விசாரித்தார்.
பிரிந்து சென்றபோதிலும் கமல் வந்து பேசியதும் சரிகாவின் முகத்திலோ மலர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது. தனது அம்மாவும், அப்பாவும் பாசமாக பேசுவதை சரிகாவின் அருகில் அமர்திருந்த ஸ்ருதி கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தார்.
என்ன ஒரு அதிசயம் விழாவுக்கு கமலும் சரி, சரிகாவும் சரி கருப்பு நிற உடையில் வந்திருந்தனர்.