40 ஆண்டுகள் கழித்து நயன்தாரா அத்திவரதரை தரிசித்தால்...
Recommended Video
சென்னை: நயன்தாரா அடுத்ததாக அத்திவரதரை தரிசிக்க சென்றால் எப்படி இருக்கும் என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.
அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கும் முன்பு நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சென்று தரிசனம் செய்தார். எத்தனையோ பிரபலங்கள் அத்திவரதரை தரிசனம் செய்தார்கள். ஆனால் நயன்தாரா தரிசித்தபோது அருகில் இருந்த அர்ச்சகர்கள் சாமியை விட்டுவிட்டு நயனை பார்த்ததால் அது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசனம் செய்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள். அதில் ஒருவர் அத்திவரதர் இருக்க அவரை விட்டுவிட்டு நயன்தாராவை புகைப்படம் எடுத்தார்.
அர்ச்சகர் ஒருவர் ஆர்வக்கோளாறில் நயன்தாராவை பார்த்து சிரிக்க அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசிவிட்டனர். நயன்தாரா தரிசனம் செய்தது பற்றி இல்லாமல் அர்ச்சகர்கள் பற்றி தான் பேசப்பட்டது.
அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைத்துவிட்டனர். இனி 40 ஆண்டுகள் கழித்து தான் அவரை தரிசனம் செய்ய முடியும். இந்நிலையில் 40 ஆண்டுகள் கழித்து தன்னை தரிசிக்க வரும் நயன்தாராவை பார்த்து அத்திவதர் அதிர்ச்சி அடைவது போன்று மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.
நயன்தாரா விஜய்யின் பிகில், ரஜினியின் தர்பார், சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவரை சுற்றியே நகர்ந்த ஐரா, கொலையுதிர்காலம் ஆகிய படங்கள் வந்த இடம் தெரியாமல் போய்விட்டன.
இந்நிலையில் தான் அவர் பிகில், தர்பார் ஆகிய படங்களை பெரிதும் எதிர்பார்க்கிறார்.


Click it and Unblock the Notifications











