Don't Miss!
- News வாய்தா மேல் வாய்தா! நடிகை விஜயலட்சுமி ஏப்ரல் 2ல் ஆஜராக அவகாசம்.. சீமான் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பிரபாஸை பற்றி ஒத்த வார்த்தை சொல்லி பெரிய பிரச்சனையில் சிக்கிய நித்யா மேனன்
சென்னை: நித்யா மேனன் பேட்டி ஒன்றில் பிரபாஸ் பற்றி ஒரு வார்த்தை சொல்ல அது பெரிய பிரச்சனையாகிவிட்டது.
நித்யா மேனன் கொடுத்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம் அவர் சாதாரணமாக ஏதாவது சொன்னால் கூட அது பெரிய பிரச்சனையாகிவிடுகிறது.
தலைக்கனம் பிடித்தவர், திமிர் பிடித்தவர் என்று தேவையில்லாமல் கெட்டப் பெயர் வாங்குவார்.
மிஸ்டர் லோக்கலை கலாய்த்து தான் 'அந்த ட்வீட்' போட்டாரா அருண் விஜய்?
பிரபாஸ்
நித்யா மேனன் 2011ம் ஆண்டு பேசியது பற்றி தற்போது மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது. நித்யா மேனன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானபோது அவரிடம் செய்தியாளர்கள் பிரபாஸ் பற்றி கேட்டனர். அதற்கு அவர் யார் என்று பதிலுக்கு கேட்டார்.
கோபம்
எங்கள் டோலிவுட்டுக்கு வந்துவிட்டு பிரபாஸையே யார் என்று கேட்கிறார் என்றால் அந்த நித்யா மேனனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று பிரபாஸின் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். நித்யாவை சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்தனர்.
நித்யா
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் பிரபாஸ் பற்றி கேட்க அது நித்யாவுக்கு சரியாக கேட்கவில்லையாம். அதனால் யார் என்று அவர் கேட்க அது வேறு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டதாம்.
வெற்றி விழா
நித்யா மேனன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான இஷ்க் படத்தின் வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரபாஸ் கலந்து கொண்டார். கலந்து கொண்டதுடன் மட்டும் அல்லாமல் நித்யாவுக்கு நினைவு கேடயத்தையும் அவர் தான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.