twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபாஸை பற்றி ஒத்த வார்த்தை சொல்லி பெரிய பிரச்சனையில் சிக்கிய நித்யா மேனன்

    By Siva
    |

    சென்னை: நித்யா மேனன் பேட்டி ஒன்றில் பிரபாஸ் பற்றி ஒரு வார்த்தை சொல்ல அது பெரிய பிரச்சனையாகிவிட்டது.

    நித்யா மேனன் கொடுத்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம் அவர் சாதாரணமாக ஏதாவது சொன்னால் கூட அது பெரிய பிரச்சனையாகிவிடுகிறது.

    தலைக்கனம் பிடித்தவர், திமிர் பிடித்தவர் என்று தேவையில்லாமல் கெட்டப் பெயர் வாங்குவார்.

    மிஸ்டர் லோக்கலை கலாய்த்து தான் 'அந்த ட்வீட்' போட்டாரா அருண் விஜய்? மிஸ்டர் லோக்கலை கலாய்த்து தான் 'அந்த ட்வீட்' போட்டாரா அருண் விஜய்?

    பிரபாஸ்

    பிரபாஸ்

    நித்யா மேனன் 2011ம் ஆண்டு பேசியது பற்றி தற்போது மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது. நித்யா மேனன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானபோது அவரிடம் செய்தியாளர்கள் பிரபாஸ் பற்றி கேட்டனர். அதற்கு அவர் யார் என்று பதிலுக்கு கேட்டார்.

    கோபம்

    கோபம்

    எங்கள் டோலிவுட்டுக்கு வந்துவிட்டு பிரபாஸையே யார் என்று கேட்கிறார் என்றால் அந்த நித்யா மேனனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று பிரபாஸின் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். நித்யாவை சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்தனர்.

    நித்யா

    நித்யா

    செய்தியாளர்கள் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் பிரபாஸ் பற்றி கேட்க அது நித்யாவுக்கு சரியாக கேட்கவில்லையாம். அதனால் யார் என்று அவர் கேட்க அது வேறு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டதாம்.

    வெற்றி விழா

    வெற்றி விழா

    நித்யா மேனன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான இஷ்க் படத்தின் வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரபாஸ் கலந்து கொண்டார். கலந்து கொண்டதுடன் மட்டும் அல்லாமல் நித்யாவுக்கு நினைவு கேடயத்தையும் அவர் தான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nithya Menen's interview in 2011 is being discussed now for all wrong reasons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X