Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சான்ஸ் கேட்டு போய் பாரதிராஜா ஆபீஸில் அடி வாங்கிய பரோட்டா சூரி
சென்னை: சான்ஸ் கேட்டுப் போனபோது பாரதிராஜாவின் அலுவலகத்தில் அடி வாங்கியதாக நடிகர் பரோட்டா சூரி தெரிவித்துள்ளார்.
வென்னிலா கபடிக் குழு படத்தில் சளைக்காமல் பரோட்டா சாப்பிட்ட காட்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சூரி. பரோட்டா காட்சியில் பிரபலமானாதால் அவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் சூரி பட வாய்ப்பு தேடி அலைந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
பாரதிராஜாவின் அலுவலகம்
ஆரம்ப காலத்தில் நான் நடிக்க வாய்ப்பு கேட்டு எனது நண்பருடன் இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரை பார்க்க முடியவில்லை. அங்குள்ளவர்கள் எங்களை வெளியே அனுப்பினர் என்றார் சூரி.
ஐடியா
பலமுறை அலைந்தும் பாரதிராஜா சாரை பார்க்கவே முடியவில்லை. அப்போது தான் அந்த அலுவலகத்திற்கு அருகில் இஸ்திரி போடும் ஒருவர் என்னிடம் பாரதிராஜா கிராமத்து கதை எடுப்பவர் அதனால் வேஷ்டி அணிந்து வந்து வாய்ப்பு கேளுங்கள் என்று கூறினார் என்று சூரி தெரிவித்தார்.
வேஷ்டியில்
இஸ்திரிகாரரின் அறிவுரையை ஏற்று மறுநாள் பாரதிராஜா சாரின் அலுவலகத்திற்கு வேஷ்டியில் சென்றேன். ஆனால் அங்கு பலரும் வேஷ்டியில் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அலுவலகத்தில் இருந்தவர்கள் என்னை வரவேற்று சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறினார்கள் என்றார் சூரி.
டயர் திருடன்
வேஷ்டி அணிந்த யாரோ உள்ளூர் வியாபாரி பாரதிராஜாவின் கார் டயரை முந்தைய நாள் திருவிட்டாராம். அதனால் தான் வேஷ்டி அணிந்தவர்கள் விசாரணைக்கு வந்ததை நான் உணர்ந்தேன் என்று சூரி கூறினார்.
அடி வாங்கினேன்
அப்போது திடீர் என்று சிலர் வந்து எங்களை தாக்கினர். நான் ஓடிப் போய் ஒளிந்துகொள்ள முயன்றேன். பின்னர் உண்மை அறிந்து அவரது அலுவலகத்தில் இருந்தவர்கரள் வந்து எங்களிடம் மன்னிப்பு கேட்டனர். அதன் பிறகு அந்த அலுவலகத்திற்கு நான் செல்லவே இல்லை என்று தெரிவித்தார் சூரி.
பாரதிராஜா சாருடன்
பாண்டிநாடு படத்தில் தற்போது பாரதிராஜா சாருடன் சேர்ந்து நடிக்கிறோம் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு காட்சியில் நானும், விஷாலும் பாரதிராஜாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்வோம். அந்த காட்சியில் நடிக்கையில் அவரது காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினேன் என்றார் சூரி.