Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்: காரணம் அந்த 4...
Recommended Video
ஹைதராபாத்: பிரபாஸ் பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த விஷயம் தெரிய வந்துள்ளது.
பாகுபலி, பாகுபலி 2 படங்கள் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ளார் பிரபாஸ். தெலுங்கு நடிகரான அவருக்கு தற்போது இந்தியா முழுவதும் மார்க்கெட் உள்ளது.
அவரை இந்தி படங்களில் நடிக்க வைக்க பாலிவுட் இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ராஜமவுலி
பாகுபலி படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமவுலி பிரபாஸிடம் கூறியபோது இந்த வாய்ப்பு வேண்டாம் என்று தெரிவித்தாராம்.
பிரபாஸ்
தொடர்ந்து 4 படங்கள் தோல்வி அடைந்த நிலையில் பாகுபலி வாய்ப்பு வந்தபோது அதை ஏற்க மறுத்தேன். என்னிடம் ஏதோ குறை இருக்கிறது என்று நினைத்தேன். ஒரு படத்தை தேர்வு செய்வதற்கு முன்பு 2 முறை யோசிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தேன் என்றார் பிரபாஸ்.
அடம்
பிரபாஸ் மறுத்தபோதிலும் ராஜமவுலி அவரை விடுவதாக இல்லை. பேசிப் பேசியே பிரபாஸின் மனதை மாற்றி பாகுபலி படத்தில் நடிக்க வைத்துவிட்டார். பிரபாஸுக்கு தனது வாழ்நாளில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது பாகுபலி.
இந்தியா
பாகுபலி இல்லை என்றால் நாடு முழுவதும் நான் பிரபலமாகியிருக்க மாட்டேன். பாகுபலி படத்தில் நடித்த பிறகே பிற மொழி பேசும் ரசிகர்களுக்கு நான் யார் என்று தெரிந்தது என்று பிரபாஸ் தெரிவித்தார்.
பட்ஜெட்
தான் பெரிய படத்தை எடுக்கிறோம். அது நிச்சயம் ஹிட்டாகும் என்பது ராஜமவுலிக்கு தெரியும். ஆனால் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை என்று பிரபாஸ் கூறினார்.