Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்: காரணம் அந்த 4...
Recommended Video
ஹைதராபாத்: பிரபாஸ் பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த விஷயம் தெரிய வந்துள்ளது.
பாகுபலி, பாகுபலி 2 படங்கள் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ளார் பிரபாஸ். தெலுங்கு நடிகரான அவருக்கு தற்போது இந்தியா முழுவதும் மார்க்கெட் உள்ளது.
அவரை இந்தி படங்களில் நடிக்க வைக்க பாலிவுட் இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ராஜமவுலி
பாகுபலி படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமவுலி பிரபாஸிடம் கூறியபோது இந்த வாய்ப்பு வேண்டாம் என்று தெரிவித்தாராம்.
பிரபாஸ்
தொடர்ந்து 4 படங்கள் தோல்வி அடைந்த நிலையில் பாகுபலி வாய்ப்பு வந்தபோது அதை ஏற்க மறுத்தேன். என்னிடம் ஏதோ குறை இருக்கிறது என்று நினைத்தேன். ஒரு படத்தை தேர்வு செய்வதற்கு முன்பு 2 முறை யோசிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தேன் என்றார் பிரபாஸ்.
அடம்
பிரபாஸ் மறுத்தபோதிலும் ராஜமவுலி அவரை விடுவதாக இல்லை. பேசிப் பேசியே பிரபாஸின் மனதை மாற்றி பாகுபலி படத்தில் நடிக்க வைத்துவிட்டார். பிரபாஸுக்கு தனது வாழ்நாளில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது பாகுபலி.
இந்தியா
பாகுபலி இல்லை என்றால் நாடு முழுவதும் நான் பிரபலமாகியிருக்க மாட்டேன். பாகுபலி படத்தில் நடித்த பிறகே பிற மொழி பேசும் ரசிகர்களுக்கு நான் யார் என்று தெரிந்தது என்று பிரபாஸ் தெரிவித்தார்.
பட்ஜெட்
தான் பெரிய படத்தை எடுக்கிறோம். அது நிச்சயம் ஹிட்டாகும் என்பது ராஜமவுலிக்கு தெரியும். ஆனால் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை என்று பிரபாஸ் கூறினார்.