Don't Miss!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
என்னை கட்டி வைத்து அடி கண்ணா: ரஜினி கூறியதை கேட்டு அதிர்ந்த நடிகர்
சென்னை: பாட்ஷா படத்தில் ரஜினியை கட்டி வைத்து அடிக்கும் காட்சியில் நடிக்க தயங்கியதாக ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான பாட்ஷா 22 ஆண்டுகள் கழித்து அண்மையில் டிஜிட்டலில் வெளியானது. இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியான போதிலும் அந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பாட்ஷா படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஆனந்த்ராஜ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
ரஜினி
பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் உதவியாளர் எனக்கு போன் செய்து சூப்பர் ஸ்டாரை நேரில் சந்திக்குமாறு கூறினார். நேரில் சென்றபோது தான் நடித்துவரும் பாட்ஷா படத்தில் ஒரு கதாபாத்திரம் இருப்பதாகவும் அதில் நடிக்குமாறும் கூறினார்.
அடி
பாட்ஷா படத்தில் ரகுவரன், சரண்ராஜ் இருக்கும்போது நமக்கு என்ன கதாபாத்திரம் என்று ரஜினியை சந்தேகமாக பார்த்தேன். அவரோ என்னை கட்டி வைத்து அடிக்கும் கதாபாத்திரம் என்றார்.
தயக்கம்
உங்களை கட்டி வைத்து அடிக்க வேண்டுமா என்று கூறி அந்த படத்தில் நடிக்க தயங்கினேன். ஆனால் ரஜினி என் தயக்கத்தை புரிந்து கொண்டு சும்மா நடிங்க என்று ஊக்கமளித்து நடிக்க வைத்தார்.
மகிழ்ச்சி
ரஜினி அளித்த ஊக்கத்தால் அவரை அடிக்கும் காட்சியில் நம்பிக்கையுடன் நடித்தேன். அந்த படம் இத்தனை ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் ரிலீஸாகியுள்ள நிலையில் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் ஆனந்த்ராஜ்.