twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியை பிச்சைக்காரர் என்று நினைத்து ரூ.10 கொடுத்த பெண்!

    By Siva
    |

    சென்னை: ரஜினிகாந்தை கோவிலில் பார்த்த பெண் ஒருவர் அவரது எளிமையான உடையைப் பார்த்து அவர் பிச்சைக்காரர் என்று நினைத்து 10 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

    ரஜினி அடிக்கடி மாறுவேடத்தில் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நண்பர்களுடன் உலா வருவது தெரிந்த விஷயம். ஒரு முறை இமயமலை கோவில் ஒன்றில் அப்படி மாறுவேடத்தில் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    When Rajinikanth was mistaken for a beggar

    கோவிலில் ரஜினி எளிமையான உடையில் ஒரு தூண் அருகே உட்கார்ந்திருக்கிறார். அப்போது கோவிலுக்கு வந்த 40களில் உள்ள ஒரு பெண் ரஜினியை யார் என்று தெரியாமல் அவரது உடையைப் பார்த்து பிச்சைக்காரர் என்று நினைத்துவிட்டார். உடனே தனது கைப்பையில் இருந்து 10 ரூபாய் நோட்டை எடுத்து ரஜினியிடம் கொடுத்துள்ளார். அவரும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டாராம்.

    பின்னர் ரஜினி தனது காரை நோக்கி செல்லும்போது தான் அந்த பெண்ணுக்கு தான் பிச்சை போட்டவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெரிய வந்துள்ளது. உடனே ஓடி வந்து ரஜினியிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் அந்த பெண். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இளம் பெண் கூறி தான் ரஜினிக்கு ஒரு பெண் பிச்சை போட்டது தெரிய வந்துள்ளது.

    நான் மட்டும் ரஜினி இடத்தில் இருந்திருந்தால் பிச்சை போட்ட அந்த பெண்ணை திட்டிவிட்டிருப்பேன். ஆனால் அவரோ அமைதியாக பணத்தை வாங்கிக் கொண்டார் என்றார் அந்த இளம் பெண்.

    இந்த நிகழ்ச்சியை ரஜினியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் பதிவு செய்துள்ளனர்.

    English summary
    A woman mistook Rajinikanth for a beggar and gave him Rs. 10 to him at a temple in Himalayas.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X