Don't Miss!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. நெல்லை கலெக்டர் அதிரடி.. உடனே சூழ்ந்த போலீஸ்! அடுத்து பரபர
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினியை பிச்சைக்காரர் என்று நினைத்து ரூ.10 கொடுத்த பெண்!
சென்னை: ரஜினிகாந்தை கோவிலில் பார்த்த பெண் ஒருவர் அவரது எளிமையான உடையைப் பார்த்து அவர் பிச்சைக்காரர் என்று நினைத்து 10 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.
ரஜினி அடிக்கடி மாறுவேடத்தில் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நண்பர்களுடன் உலா வருவது தெரிந்த விஷயம். ஒரு முறை இமயமலை கோவில் ஒன்றில் அப்படி மாறுவேடத்தில் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கோவிலில் ரஜினி எளிமையான உடையில் ஒரு தூண் அருகே உட்கார்ந்திருக்கிறார். அப்போது கோவிலுக்கு வந்த 40களில் உள்ள ஒரு பெண் ரஜினியை யார் என்று தெரியாமல் அவரது உடையைப் பார்த்து பிச்சைக்காரர் என்று நினைத்துவிட்டார். உடனே தனது கைப்பையில் இருந்து 10 ரூபாய் நோட்டை எடுத்து ரஜினியிடம் கொடுத்துள்ளார். அவரும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டாராம்.
பின்னர் ரஜினி தனது காரை நோக்கி செல்லும்போது தான் அந்த பெண்ணுக்கு தான் பிச்சை போட்டவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெரிய வந்துள்ளது. உடனே ஓடி வந்து ரஜினியிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் அந்த பெண். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இளம் பெண் கூறி தான் ரஜினிக்கு ஒரு பெண் பிச்சை போட்டது தெரிய வந்துள்ளது.
நான் மட்டும் ரஜினி இடத்தில் இருந்திருந்தால் பிச்சை போட்ட அந்த பெண்ணை திட்டிவிட்டிருப்பேன். ஆனால் அவரோ அமைதியாக பணத்தை வாங்கிக் கொண்டார் என்றார் அந்த இளம் பெண்.
இந்த நிகழ்ச்சியை ரஜினியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் பதிவு செய்துள்ளனர்.