Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினியை பிச்சைக்காரர் என்று நினைத்து ரூ.10 கொடுத்த பெண்!
சென்னை: ரஜினிகாந்தை கோவிலில் பார்த்த பெண் ஒருவர் அவரது எளிமையான உடையைப் பார்த்து அவர் பிச்சைக்காரர் என்று நினைத்து 10 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.
ரஜினி அடிக்கடி மாறுவேடத்தில் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நண்பர்களுடன் உலா வருவது தெரிந்த விஷயம். ஒரு முறை இமயமலை கோவில் ஒன்றில் அப்படி மாறுவேடத்தில் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கோவிலில் ரஜினி எளிமையான உடையில் ஒரு தூண் அருகே உட்கார்ந்திருக்கிறார். அப்போது கோவிலுக்கு வந்த 40களில் உள்ள ஒரு பெண் ரஜினியை யார் என்று தெரியாமல் அவரது உடையைப் பார்த்து பிச்சைக்காரர் என்று நினைத்துவிட்டார். உடனே தனது கைப்பையில் இருந்து 10 ரூபாய் நோட்டை எடுத்து ரஜினியிடம் கொடுத்துள்ளார். அவரும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டாராம்.
பின்னர் ரஜினி தனது காரை நோக்கி செல்லும்போது தான் அந்த பெண்ணுக்கு தான் பிச்சை போட்டவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெரிய வந்துள்ளது. உடனே ஓடி வந்து ரஜினியிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் அந்த பெண். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இளம் பெண் கூறி தான் ரஜினிக்கு ஒரு பெண் பிச்சை போட்டது தெரிய வந்துள்ளது.
நான் மட்டும் ரஜினி இடத்தில் இருந்திருந்தால் பிச்சை போட்ட அந்த பெண்ணை திட்டிவிட்டிருப்பேன். ஆனால் அவரோ அமைதியாக பணத்தை வாங்கிக் கொண்டார் என்றார் அந்த இளம் பெண்.
இந்த நிகழ்ச்சியை ரஜினியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் பதிவு செய்துள்ளனர்.