பரட்டையை நினைவூட்டிய ‘ஜிகிர்தண்டா’ சேது... கார்த்திக் சுப்புராஜை பாராட்டிய ரஜினி!

சென்னை: லிங்கா படப்பிடிப்பின் போது ரஜினியை சந்தித்ததை தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

பீட்சா, ஜிகிர்தண்டா உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர், லிங்கா படப்பிடிப்பு சிமோகாவில் நடைபெற்ற போது நடிகர் கருணாகரன் உதவியோடு ரஜினியைச் சந்தித்து பேசினாராம்.

லிங்கா படம் வரும் 12ம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரஜினியுடனான தனது சந்திப்பை பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

When Rajinikanth was reminded of 'Parattai' role

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

"'லிங்கா' படம் வெளியாக இருப்பதால், எனது வாழ்க்கையின் அற்புதமான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சிமோகாவில் நடைபெற்ற 'லிங்கா' படப்பிடிப்பின் போது தலைவரை சந்தித்து பேசினேன்.

'ஜிகர்தண்டா' படத்தை வெகுவாக பாராட்டினார். ஓட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பை பாராட்டினார். எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மகத்தான பாராட்டு, "நான் சேது பாத்திரத்தை செய்ய விரும்பினேன்" என்று தெரிவித்தார். அதுமட்டுமன்றி சிம்ஹாவின் நடிப்பைப் பார்த்தபோது தனக்கு 'பரட்டை' கதாபாத்திரம் ஞாபகம் வந்ததாக தெரிவித்தார் ரஜினிகாந்த்.

'முள்ளும் மலரும்', 'பாட்ஷா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நன்றி தலைவா! இது போதும்.

இச்சந்திப்பிற்கு உதவிய கருணாகரன் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத 2 மணி நேரமாக அமைந்தது" என இவ்வாறு அதில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X