Don't Miss!
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வந்தா சொருகிட வேண்டியது தான்: கத்தியும் கையுமாக சுற்றிய சன்னி லியோன், காரணம்...
மும்பை: சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர் ஒருவர் மிரட்டியதை அடுத்து கத்தியுடன் வீட்டில் சுற்றியுள்ளார் நடிகை சன்னி லியோன்.
சமூக வலைதளங்கள் மூலம் தொல்லை கொடுப்பதற்கு எதிரான என்.ஜி.ஓ. ஒன்றுடன் கைகோர்த்துள்ளார் பாலிவுட் நடிகை சன்னி லியோன். இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
மிரட்டல்
உன் வீட்டிற்கு வந்து உன்னை காயப்படுத்துவேன் என்று ஒருவர் எனக்கு சமூக வலைதளம் மூலமாக மிரட்டல் விடுத்தார். அப்போது என் கணவர் வெளிநாடு சென்றிருந்தார்.
கத்தி
மிரட்டல் விடுத்த நபர் வீட்டிற்கு வந்துவிடுவாரோ என்று பயந்தேன். வீட்டில் தனியாக இருந்ததால் பயமாக இருந்து. வெளியே ஏதோ சப்தம் கேட்பது போன்று இருக்கும். கையில் கத்தியுடன் வந்து கதவு அருகில் நின்றேன்.
நேரில்
சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர் என் வீட்டிற்கே வந்து கதவை ஓங்கித் தட்டினார். அவரை ட்விட்டரில் ஃபாலோ செய்பவர்களும் என்னை மிரட்டினார்கள்.
கண்காணிப்பு
மிரட்டல் சம்பவங்களை அடுத்து என் வீட்டிற்கு வெளியே கேமராக்கள் பொருத்தினோம். ஆன்லைனில் தொல்லைக்குள்ளாவதால் இளம் தலைமுறையினர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சிலர் தற்கொலை செய்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார் சன்னி லியோன்.