Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அமைச்சர் இப்படி சொல்லிட்டாரே.. அப்போ திரையரங்குகளை நம்பியுள்ளவர்களின் கதி?
சென்னை: கொரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை இருப்பதால் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசித்தே முடிவெடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை அலை வாரியாக மிரட்டி வருகிறது கொரோனா வைரஸ். பல லட்சம் மனித உயிர்களை வாரி விழுங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த இரண்டாண்டுகளாக பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து நீயா நானா என போட்டி போட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்ட நடிகர் சிபி சத்யராஜ்
அதளபாதாளத்தில் தொழில்துறை
இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களின் படிப்பும் கேள்வி குறியாகியுள்ளது. பல தொழில்துறைகள் அதாபாதாளத்திற்கு சென்றுவிட்டன.
தள்ளி வைக்கப்படும் படங்கள்
இதில் சினிமாதுறையும் விதிவிலக்கல்ல. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு முதல் குறிக்கப்பட்ட தேதிகளில் படப்பிடிப்புகள் நடத்தப்படவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல படங்களில் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.
திரையரங்க தொழில் பாதிப்பு
பைனான்ஸ் வாங்கி படம் பண்ணிய தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாமல் வாங்கிய கடனை அடைக்க ஓடிடி தளத்திற்கு படத்தை விற்பனை செய்து வருகின்றனர். திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1500 கோடி வியாபாரம்
வருடத்திற்கு 200 திரைப்படங்களை கொடுக்கும் சினிமா துறையான தமிழ் சினிமா கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டுக்கு 10 படங்களை கூட ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது. வருடத்திற்கு இரண்டாயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறும் தமிழ் சினிமாவில், திரையரங்கு மூலம் 1500 கோடி வியாபாரம் நடைபெற்ற நிலையில் தற்போது வியாபாரமே இல்லாமல் திணறி நிற்கிறது திரையரங்க தொழில்.
கட்டுப்பாடுகளில் தளர்வுகள்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட திரையரங்குகள் இந்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் மூடப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தியேட்டர்களை திறக்க அனுமதிக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அமைச்சர் பதில்
இந்நிலையில் கொரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளை திறந்தால் ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் திரள வாய்ப்புள்ளது. இதனால் நோய் தொற்றும் விரைவாக பரவும் என்பதால் அரசு இப்படியொரு நிலைப்பாட்டில் உள்ளது.
யோசனையில் அரசு
வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் திரையரங்குகளை திறக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் உள்ளது தமிழக அரசு. திரையரங்க தொழிலாளர்களையும் கருத்தில் கொண்டு தியேட்டர்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்