பாகுபலி 2, ஓப்போ எப்3: இரண்டு ஹீரோக்கள் ஒன்று சேர்ந்தால்...
சென்னை: பாகுபலியை போன்றே ஓப்போ எப்3 போனுக்காகவும் மக்கள் காத்திருக்கிறார்கள். ஓப்போ எப்3க்கும், பாகுபலி 2க்கும் இடையே சில ஒற்றுமை உள்ளது.
பாகுபலி படம் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் ரிலீஸானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. உலக சினிமாவே மிரண்டு போய் பாகுபலியை திரும்பிப் பார்த்தது. படத்தை பார்த்தவர்கள் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினார்கள். அதற்கான விடை பாகுபலி 2 படத்தில் கிடைத்துள்ளது.

பாகுபலி படத்தை போன்றே மக்கள் புதிய ஓப்போ எப்3 போனுக்காக காத்திருக்கிறார்கள். பாகுபலி 2 படத்திற்கும், ஓப்போ எப்3க்கும் இடையே சில ஒற்றுமை உள்ளது.
பாகுபலி 2 படம் ரிலீஸாகும் முன்பே பிரபலமானதை போன்றே சந்தைக்கு வரும் முன்பே ஓப்போ எப்3 போனும் பிரபலமாகியுள்ளது. 4கே- ஹெச்டியில் வெளியான முதல் இந்திய படம் பாகுபலி. விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஓப்போ எப்3 செல்போனில் டூயல் செல்ஃபி கேமரா உள்ளது. இது தனியாக மற்றும் பிறருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க பெரிதும் உதவியாக இருக்கும். ரசிகர்களுக்கு சிறந்த படத்தை அளிக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட படம் பாகுபலி. அதே போன்று வாடிகையாளர்களுக்கு சிறந்த செல்ஃபி அனுபவம் அளிக்க உருவாக்கப்பட்டுள்ளது ஓப்போ எப்3.
செல்ஃபி மற்றும் கேமரா போன்கள் ஐடியாவை முதலில் அறிமுகப்படுத்திய செல்போன் தயாரிப்பாளர்களில் ஓப்போவும் ஒன்று. ஓப்போ என்றாலே உயர் தரம் என்று அறியப்படுகிறது.
செல்ஃபி எடுப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையை பார்த்த ஓப்போ தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த செல்ஃபி அனுபவத்தை அளிக்க ஓப்போ கேமரா போன்களை அறிமுகப்படுத்தியது.
ஓப்போ எப்3 போனின் 2.0 வெர்ஷன் வரும் 4ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. பாகுபலி 2 படம் போன்றே ஓப்போ எப்3 போனும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications