Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஜீத் பட வசனங்களை கேட்டு புல்லரித்துப் போய் நின்ற விஜய்
சென்னை: அஜீத்தின் வீரம் படத்தின் வசனங்களை இளைய தளபதி விஜய் பாராட்டியதாக இயக்குனர் பரதன் தெரிவித்துள்ளார்.
தில், தூள், கில்லி, மதுர ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய பரதன் அழகிய தமிழ் மகன் படம் மூலம் இயக்குனர் ஆனார். அவரின் முதல் ஹீரோ இளைய தளபதி விஜய் தான்.
சிம்புவின் ஒஸ்தி, அஜீத்தின் வீரம் படங்களுக்கும் வசனம் எழுதியவர் பரதனே.

பைரவா
தனது முதல் ஹீரோவான விஜய்யை வைத்து பைரவா படத்தை இயக்கி வருகிறார் பரதன். பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கில்லி
நான் பைரவா படத்தின் கதையை கூற விஜய்யை பார்க்க சென்றேன். கில்லி படப்பிடிப்பின்போது அவர் என்னிடம் எப்படி நடந்து கொண்டாரோ அதே போன்று அன்பாக நடந்து கொண்டார் என்கிறார் பரதன்.

வீரம்
என்னை அன்புடன் வரவேற்ற விஜய் அஜீத்தின் வீரம் படத்திற்காக நான் எழுதிய வசனங்களை பாராட்டினார். வீரம் படத்தில் வரும் சில வசனங்களை கேட்டு தனக்கு புல்லரித்ததாக அவர் கூறினார் என பரதன் தெரிவித்துள்ளார்.

விஜய்
பைரவா கதையை கேட்டதும் விஜய்க்கு பிடித்துவிட்டது. இந்த படத்தை நாம் கண்டிப்பாக பண்றோம் பரதன் என்று கூறி எனக்கு கை கொடுத்தார் என்று பரதன் கூறியுள்ளார்.