Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அஜீத் பட வசனங்களை கேட்டு புல்லரித்துப் போய் நின்ற விஜய்
சென்னை: அஜீத்தின் வீரம் படத்தின் வசனங்களை இளைய தளபதி விஜய் பாராட்டியதாக இயக்குனர் பரதன் தெரிவித்துள்ளார்.
தில், தூள், கில்லி, மதுர ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய பரதன் அழகிய தமிழ் மகன் படம் மூலம் இயக்குனர் ஆனார். அவரின் முதல் ஹீரோ இளைய தளபதி விஜய் தான்.
சிம்புவின் ஒஸ்தி, அஜீத்தின் வீரம் படங்களுக்கும் வசனம் எழுதியவர் பரதனே.
பைரவா
தனது முதல் ஹீரோவான விஜய்யை வைத்து பைரவா படத்தை இயக்கி வருகிறார் பரதன். பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கில்லி
நான் பைரவா படத்தின் கதையை கூற விஜய்யை பார்க்க சென்றேன். கில்லி படப்பிடிப்பின்போது அவர் என்னிடம் எப்படி நடந்து கொண்டாரோ அதே போன்று அன்பாக நடந்து கொண்டார் என்கிறார் பரதன்.
வீரம்
என்னை அன்புடன் வரவேற்ற விஜய் அஜீத்தின் வீரம் படத்திற்காக நான் எழுதிய வசனங்களை பாராட்டினார். வீரம் படத்தில் வரும் சில வசனங்களை கேட்டு தனக்கு புல்லரித்ததாக அவர் கூறினார் என பரதன் தெரிவித்துள்ளார்.
விஜய்
பைரவா கதையை கேட்டதும் விஜய்க்கு பிடித்துவிட்டது. இந்த படத்தை நாம் கண்டிப்பாக பண்றோம் பரதன் என்று கூறி எனக்கு கை கொடுத்தார் என்று பரதன் கூறியுள்ளார்.