Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஜீத் பட வசனங்களை கேட்டு புல்லரித்துப் போய் நின்ற விஜய்
சென்னை: அஜீத்தின் வீரம் படத்தின் வசனங்களை இளைய தளபதி விஜய் பாராட்டியதாக இயக்குனர் பரதன் தெரிவித்துள்ளார்.
தில், தூள், கில்லி, மதுர ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய பரதன் அழகிய தமிழ் மகன் படம் மூலம் இயக்குனர் ஆனார். அவரின் முதல் ஹீரோ இளைய தளபதி விஜய் தான்.
சிம்புவின் ஒஸ்தி, அஜீத்தின் வீரம் படங்களுக்கும் வசனம் எழுதியவர் பரதனே.
பைரவா
தனது முதல் ஹீரோவான விஜய்யை வைத்து பைரவா படத்தை இயக்கி வருகிறார் பரதன். பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கில்லி
நான் பைரவா படத்தின் கதையை கூற விஜய்யை பார்க்க சென்றேன். கில்லி படப்பிடிப்பின்போது அவர் என்னிடம் எப்படி நடந்து கொண்டாரோ அதே போன்று அன்பாக நடந்து கொண்டார் என்கிறார் பரதன்.
வீரம்
என்னை அன்புடன் வரவேற்ற விஜய் அஜீத்தின் வீரம் படத்திற்காக நான் எழுதிய வசனங்களை பாராட்டினார். வீரம் படத்தில் வரும் சில வசனங்களை கேட்டு தனக்கு புல்லரித்ததாக அவர் கூறினார் என பரதன் தெரிவித்துள்ளார்.
விஜய்
பைரவா கதையை கேட்டதும் விஜய்க்கு பிடித்துவிட்டது. இந்த படத்தை நாம் கண்டிப்பாக பண்றோம் பரதன் என்று கூறி எனக்கு கை கொடுத்தார் என்று பரதன் கூறியுள்ளார்.