Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இப்ப மட்டும் நான் கண்ணுக்கு தெரியிறேனா?: சீதக்காதி இயக்குனரிடம் கேட்ட விஜய் சேதுபதி
Recommended Video
சென்னை: இப்ப மட்டும் நான் கண்ணுக்கு தெரிகிறேனோ என்று சீதக்காதி இயக்குனரிடம் விஜய் சேதுபதி கேட்டுள்ளார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை அடுத்து பாலாஜி தரணிதரன் இயக்கிய சீதக்காதி படம் இன்று வெளியாகியுள்ளது. இது விஜய் சேதுபதி படம் என்று கூறப்பட்டாலும் அவர் வெறும் 40 நிமிடங்கள் தான் வருகிறார்.
இந்நிலையில் படம் குறித்து பாலாஜி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
தாக்கம்
5 ஆண்டுகளுக்கு முன்பு மேடை நாடகம் ஒன்றை பார்த்தேன். பள்ளியில் படித்த போது ஒரு சில மேடை நாடகங்களை பார்த்தேன். அதன் பிறகு பார்க்கவில்லை. அப்படி இருக்கும் அந்த மேடை நாடகம் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அந்த நாடகத்தில் நடித்தவர்களுடன் நேரம் செலவிட்டேன். டிவியில் பார்த்தவர்களை நேரில் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது.
கதை
நாடகத்தை பார்க்க வெகு சிலரே வருகின்றபோதிலும் அரங்கு நிறைந்திருப்பது போன்று நினைத்துக் கொண்டு அந்த கலைஞர்கள் நடிப்பது என்னுள் ஏதோ செய்தது. அதில் இருந்து பிறந்த கதை தான் சீதக்காதி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை முடித்த உடன் சீதக்காதி கதை தயாராகிவிட்டது.
விஜய் சேதுபதி
75 வயது உள்ள பிரபல நடிகரை சீதக்காதி படத்தில் நடிக்க வைக்க நினைத்தேன். சரியான ஆள் கிடைக்காததால் படத்தை கைவிட்டேன். 2013ம் ஆண்டு சீதக்காதி கதை குறித்து அறிந்த விஜய் சேதுபதி என்னை அணுகி நான் நடிக்கிறேன் என்றார். அவர் ஜோக்கடிக்கிறார் என்று நினைத்தேன். அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் சேதுபதியிடமே போய் நின்றேன்.
ஹீரோ
நான் மீண்டும் விஜய் சேதுபதியை அணுகியபோது இப்போ தான் நான் கண்ணுக்கு தெரிகிறேனா, அப்போ என் மீது நம்பிக்கை இல்லையா என்று கேட்டு கிண்டல் செய்தார் அவர். ஒரு கதை பிடித்துவிட்டால் உடனே நடிக்க ஒப்புக் கொள்வார் விஜய் சேதுபதி. அவருடன் சேர்ந்து பணியாற்றியது இனிமையான அனுபவம் என்கிறார் பாலாஜி.