Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெரும் சவாலாக மாறும் பொன்னியின் செல்வன்.. வெல்லப் போவது யாரு!
சென்னை: பொன்னியின் செல்வன்...இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படம். அமரர் கல்கி எழுதிய காலத்தால் அழியாத வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். கல்கி வர இதழில் 5 ஆண்டுகள் தொடர்கதையாக வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
இந்த காவியத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது எம்ஜிஆர், கமலஹாசன் உள்பட பலரது கனவு. இதில் மிக தீவிரமாக இயங்கியவர் இயக்குனர் மணிரத்னம். இந்த நாவலை படமாக எடுப்பதையே தனது கனவாக கொண்டுள்ள மணிரத்னம் நாவலை திரைப்படமாக எடுக்கும் காப்புரிமையையும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
பார்ட் பார்ட்டா படம் எடுத்தும் பெரிய வெற்றி கிடைக்கலையே!
மணிரத்னத்தின் ஒவ்வொரு படம் வெளியான பின்னரும், அவரது அடுத்த பட அறிவிப்பு பொன்னியின் செல்வனாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழும். இந்த முறையம் அதே போன்றதொரு தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் மகள் சவுந்தர்யாவும், இந்த நாவலை வெப் சீரிஸ் ஆக எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்துள்ள நிலையிலும், இந்த நாவலை படமாக எடுப்பது அவ்வளவு சிரமமா என்ற கேள்வி எழலாம். பொதுவாகவே வரலாற்று படம் எடுப்பது சிரமமான விஷயம். அண்ணண் - தம்பி இடையேயான அரியணை போட்டியை மையப்படுத்தி வந்த பாகுபலியை திரையில் கொண்டு வர ராஜமவுலிக்கு நான்கரை ஆண்டுகள் ஆகின.
ஆனால் பொன்னியின் செல்வனை பொறுத்தவரை 5 பாகங்கள், வந்திய தேவன் அருள்மொழித்தேவன் , ஆதித்த கரிகாலன், குந்தவி தேவி, வானதி, மந்தாகினி தேவி, நந்தினி, பழுவேட்டரையர்கள், செம்பியன்மாதேவி, கண்டராதித்தர் என 50-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள். எந்த கதாபாத்திரமும் தேவையில்லாமல் வராத வகையில் அனைத்து பாத்திரங்களையும் பயன்படுத்தி கதையை அமைத்திருப்பார் கல்கி. 5 பாகங்களையும் படித்து முடித்து திரும்ப படிக்க ஆரம்பித்தால் மறுபடி புதிதாக படிப்பது போல் இருப்பதுதான் இதன் சிறப்பு.
இக்கதையை திரையில் கொண்டுவர எவ்வளவு செலவு ஆகும் என்பதே கணக்கிட முடியாத ஒன்று. அப்படியே கணக்கிட்டால் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைத்து திரைக்கதை அமைத்து, அதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் மூலம் அதை ரசிகர்கள் கண்முன் கொண்டு வருவது மிகப்பெரிய சவால். இந்த சவாலை முதன் முதலில் வெல்லப்போகிறவர் யார் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!