Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எந்த புதுப்படத்துக்கு சைன் பண்ணி செட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கு.. மனம் திறக்கும் நடிகை!
எப்போது ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: எப்போது ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.
அவருக்கு என தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
கனவு ரோல் எதுவும் இல்லை
அதில் தனக்கென கனவு ரோல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். தனக்கு அமையும் கதாப்பாத்திரங்கள் அனைத்தையும் தன்னுடைய கனவு கதாபர்த்திரங்களாகவே நினைப்பதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
முடியுமா முடியாத என்ற பயம்
எப்போது புதுப்படத்தை ஒப்புக்கொண்டு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனாலும் தனக்கு நடுக்கம் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தேவையான முகபாவனைகளை கொடுக்க முடியுமா முடியாத என்ற பயத்திலேயே இந்த பயம் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த பயம் இருக்கும்..
ஆனால் அந்த பயம் சில நாட்கள் ஷுட்டிங் முடிந்த பின்னரே போகும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுவரை அந்த பயம் இருக்கும் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
மீண்டும் மணிகண்டனுடன்..
மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை என்றும் அது விரைவில் நடக்கவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். பாலிவுட்டில் கரன் ஜோஹர் இயக்கத்தில்தான் நடிக்க விரும்பியதாகவும் அது தற்போது நடந்து விட்டது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். மேலும் காக்கா முட்டை மணிகண்டனுடன் தான் மீண்டும் பணிபுரிய விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.