காணாமல் போன காந்தக் கண்ணழகி.. நடிப்பை கிடப்பில் போட்ட சம்ஸ்கிருதி!
சென்னை : 'ஆள சாச்சு புட்ட கொய்யால' என்ற பாடலின் மூலம் நமக்கெல்லாம் நன்கு தெரிந்தவர் சம்ஸ்குருதி ஷெனாய். இவர் மளையாள சினிமாவின் மூலம் தனது நடிப்பு வாழ்கையை துவங்கினார் .இவர் மளையாளத்தில் மை ஃபேன் ராமு படம் மூலம் அறிமுகமானார் .
அதற்கு பிறகு பிளாக் பட்டர்ப்ளை என்ற படத்தில் நடித்தார் .அதற்கு பிறகு சம்ஸ்கிருதிக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிட்டியது ,ஹிருதயம் ஏக்கதுன்னடி படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார் .மீண்டும் மளையாளத்தில் வினித் குமாருக்கு ஜோடியாக வேகம் படத்தில் நடித்தார் ,அந்த படம் வெற்றியடைய ஒரு நிலையான இடம் சினிமாவில் கிட்டியது .

இதன் மூலம் தமிழில் சம்ஸ்கிருதிக்கு வாயப்பு கிடைத்தது ,இதன் மூலம் விதார்துக்கு ஜோடியாக காடு படத்தில் நடித்திருந்தார் ,இந்த படம் ஒரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மளையாளத்தில் நிக்கா ,அனார்களி படங்களில் நடித்தார் .அனார்களி படம் மாபெரும் வெற்றி அடைந்தது எனினும் அந்த படத்தில் இரண்டாம் கதாநாயகி என்பதால் அவர் சரியாக கவனிக்கபடவில்லை .
இதற்கு பிறகு இவர் தமிழில் வில் அம்பு படத்தில் நடித்தார் ,அந்த படம் வெளிவருவதற்கு முன் அந்த படத்தின் 'ஆள சாச்சு புட்டா கொய்யால' என்ற பாடல் வெளியிடப்பட்டது .அந்த பாடல் பட்டி தொட்டி முழுவதும் பிரபலமடைய சம்ஸ்கிருதி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

இதன் பிறகு மருபூமியல ஆன,ஹாப்பி பர்த்டே ,தண்ணி வண்டி ஆகிய படங்களில் நடித்தார் சம்ஸ்குருதி .அதன் பிறகு அவருக்கு திருமனம் நடக்க நடிப்பை அத்துடன் விட்டார் சம்ஸ்கிருதி . சம்ஸ்கிருதி 5 மொழிகளில் சரலமாக பேசும் திறன் உடையவர் ,நன்றாக நடனம் ஆடுபவர் ,திறமை இருந்தும் சம்ஸ்கிருதி சினிமாவில் நீடிக்காதது வருத்தம் தான்.

'ஆள சாச்சு புட்ட கொய்யால' என்ற பாடலின் மூலம் நமக்கெல்லாம் நன்கு தெரிந்தவர் சம்ஸ்கிருதி ஷெனாய். இவர் மளையாள சினிமாவின் மூலம் தனது நடிப்பு வாழ்கையை துவங்கினார் .இவர் மளையாளத்தில் மை ஃபேன் ராமு படம் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு பிளாக் பட்டர்ப்ளை என்ற படத்தில் நடித்தார் .அதற்கு பிறகு சம்ஸ்கிருதிக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிட்டியது.


Click it and Unblock the Notifications











