Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் கணவர் நண்பர்களின் கட்டாயத்தால் மது குடித்தார்: கலாபவன் மணியின் மனைவி புகார்
திருவனந்தபுரம்: தனது கணவரை சில நண்பர்களின் கட்டாயத்தால் மது அருந்தி வந்ததாக நடிகர் கலாபவன் மணியின் மனைவி நிம்மி தெரிவித்துள்ளார்.
நடிகர் கலாபவன் மணி கல்லீரல் பிரச்சனையால் கடந்த 6ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மணி அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரகசிய விசாரணை
மணியை யாராவது திட்டமிட்டே கொலை செய்தார்களா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். போலீசார் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் 4 பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிம்மி மணி
என் கணவரின் மரணத்தில் மர்மம் உள்ளது. அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்ததாக எனக்கு தெரியவில்லை. அவர் பீர் மட்டும் தான் குடிப்பார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. சில நண்பர்களின் கட்டாயத்தால் மது அருந்தி வந்தார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார் என மணியின் மனைவி நிம்மி தெரிவித்துள்ளார்.
சாராயம்
நான் மணியின் நண்பர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மது அளித்தேன். அப்போது மணி அதை குடிக்கவில்லை. மீதமுள்ள மதுவை நான் எடுத்துச் சென்றேன். நான் படிக்க உதவியவர் மணி. பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் மது அளித்தேன். பிப்ரவரி 15ம் தேதி நான் அபுதாபிக்கு சென்றுவிட்டேன். மணிக்கு யார் மது அளித்தார்கள் என எனக்கு தெரியாது என அவரின் நண்பர் ஜோமோன் கூறியுள்ளார்.
மணி
நான் மணி மது அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் அவரை சந்தித்தேன். படம் குறித்து பேச அங்கு சென்றேன். அவருடன் சில நண்பர்கள் இருந்தனர். அவர் பீர் மட்டும் தான் குடித்தார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார் என நடிகரும், மணியின் நண்பருமான ஜாபர் இடுக்கி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்கொலை
மணியின் மரணத்தை தற்கொலை போன்று தெரிய முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சட்டப்பூர்வமாக போராடுவோம். அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார். அவருக்கு குடும்ப பிரச்சனை எதுவும் இல்லை. அது விஷ சாராயம் என்றால் மணிக்கு மட்டும் எப்படி பாதிப்பு ஏற்பட்டிருக்கும்? அவரை பலர் பணத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர் என்கிறார் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!