Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என் கணவர் நண்பர்களின் கட்டாயத்தால் மது குடித்தார்: கலாபவன் மணியின் மனைவி புகார்
திருவனந்தபுரம்: தனது கணவரை சில நண்பர்களின் கட்டாயத்தால் மது அருந்தி வந்ததாக நடிகர் கலாபவன் மணியின் மனைவி நிம்மி தெரிவித்துள்ளார்.
நடிகர் கலாபவன் மணி கல்லீரல் பிரச்சனையால் கடந்த 6ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மணி அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரகசிய விசாரணை
மணியை யாராவது திட்டமிட்டே கொலை செய்தார்களா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். போலீசார் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் 4 பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிம்மி மணி
என் கணவரின் மரணத்தில் மர்மம் உள்ளது. அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்ததாக எனக்கு தெரியவில்லை. அவர் பீர் மட்டும் தான் குடிப்பார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. சில நண்பர்களின் கட்டாயத்தால் மது அருந்தி வந்தார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார் என மணியின் மனைவி நிம்மி தெரிவித்துள்ளார்.
சாராயம்
நான் மணியின் நண்பர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மது அளித்தேன். அப்போது மணி அதை குடிக்கவில்லை. மீதமுள்ள மதுவை நான் எடுத்துச் சென்றேன். நான் படிக்க உதவியவர் மணி. பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் மது அளித்தேன். பிப்ரவரி 15ம் தேதி நான் அபுதாபிக்கு சென்றுவிட்டேன். மணிக்கு யார் மது அளித்தார்கள் என எனக்கு தெரியாது என அவரின் நண்பர் ஜோமோன் கூறியுள்ளார்.
மணி
நான் மணி மது அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் அவரை சந்தித்தேன். படம் குறித்து பேச அங்கு சென்றேன். அவருடன் சில நண்பர்கள் இருந்தனர். அவர் பீர் மட்டும் தான் குடித்தார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார் என நடிகரும், மணியின் நண்பருமான ஜாபர் இடுக்கி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்கொலை
மணியின் மரணத்தை தற்கொலை போன்று தெரிய முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சட்டப்பூர்வமாக போராடுவோம். அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார். அவருக்கு குடும்ப பிரச்சனை எதுவும் இல்லை. அது விஷ சாராயம் என்றால் மணிக்கு மட்டும் எப்படி பாதிப்பு ஏற்பட்டிருக்கும்? அவரை பலர் பணத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர் என்கிறார் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.