Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அடுத்த படத்திற்கு தயாராகும் அட்லி… ஹீரோ யார்?
சென்னை: அட்லி தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோக்களை தேடிக்கொண்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. ஷாருக்கானும் அட்லியும் இணையப் போவதாக தகவல் வெளிவந்த நிலையில் இப்படி ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே, தான் இயக்கிய படங்கள் எல்லாவற்றையும் ஹிட் கொடுத்து மிகவும் பிரபலமானார் இயக்குநர் அட்லி. ராஜா ராணி, தெறி,மெர்சல் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அட்லி கடைசியாக இயக்கிய படம் பிகில். இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த அட்லி மீண்டும் விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கினார். இப்படம் வெளியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதையடுத்து அட்லி பாலிவுட்டில் கால் பதிக்கப்போகிறார், ஷாருக்கானை வைத்து படம் எடுக்கப்போகிறார் என்று எல்லாம் பரப்பரப்பாக பேசப்பட்டது. பிகில் படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, சென்னையில் ஷாருக்கானை சந்தித்துப்பேசினார் அட்லி.
இது உண்மைதான் என்பது போல ஷாருக்கான் பிறந்தநாள் அன்று, ஷாருக்கான், அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை அட்லி வெளியிட்டு இருந்தார். இப்புகைப்படம் வெளியானதால், அட்லி அடுத்து ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், அட்லி தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோக்களை தேடிக்கொண்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் அந்த யோகம் யாருக்கு அடிக்கப்போகிறது என்று.