Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிக்பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வானவர்கள் இவர்கள்தான்.. போட்டி கடுமையான இருக்கும் போலயே!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டன் டாஸ்கிற்கு போட்டியிடும் 3 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் வாரம் தோறும் ஒருவர் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த வாரம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாய் வெளியேற்றப்பட்டார்.
பொன்மகள் வந்தாள் டூ மூக்குத்தி அம்மன் வரை.. 2020ல் ஹீரோயின்களை முன்னிலைப்படுத்திய டாப் 10 படங்கள்!
ஓசி கேப்டன்
இதனால் அவருடன் கேப்டன் டாஸ்க்கில் பங்கேற்ற பாலாஜியை கேப்டனாக்கினார் அர்ச்சனா. இதற்காக சமூக வலைதளங்களில் ஓசி கேப்டன் என ட்ரோல் செய்யப்பட்டார் பாலாஜி.
இரண்டு பேர்
இந்நிலையில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் அதிக பாயிண்ட்ஸ்களை பெற்ற ரியோ நேரடியாக கேப்டன் ஷிப் டாஸ்க்கு தகுதி பெற்றார். இதனை தொடர்ந்து இந்த வாரம் முழுக்க அனைத்திலும் சிறப்பாக செய்த இரண்டு பேரை தேர்வு செய்ய கூறினார் பிக்பாஸ்.
சோம் ஆரி
இதில் சோம் 5 ஓட்டுகளையும் ஆரி, மற்றும் ரம்யா ஆகிய 2 பேரும் தலா 4 ஓட்டுக்களையும் பெற்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேருக்கும் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆரிக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தது.
ஆரியிடம் முகத்தை காட்டி
இதன் மூலம் இந்த வார கேப்டன் டாஸ்க்கில் ஆரி, ரியோ, சோம் ஆகிய மூன்று பேரும் இடம் பெற்றுள்ளனர். அர்ச்சனா வெளியேறியதில் இருந்து ரியோ, எதற்கெடுத்தாலும் ஆரியிடம் முகத்தை காட்டி வருகிறார்.
Recommended Video
கடுமையானதாக இருக்கும்
இதனால் ஆரியை கேப்டன் ஆகவிடக்கூடாது என்பதில் தீயாய் இருப்பார் என தெரிகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் இந்த வார கேப்டன்ஸி டாஸ்க் கடுமையானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.