பிக்பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வானவர்கள் இவர்கள்தான்.. போட்டி கடுமையான இருக்கும் போலயே!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டன் டாஸ்கிற்கு போட்டியிடும் 3 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் வாரம் தோறும் ஒருவர் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த வாரம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாய் வெளியேற்றப்பட்டார்.

ஓசி கேப்டன்
இதனால் அவருடன் கேப்டன் டாஸ்க்கில் பங்கேற்ற பாலாஜியை கேப்டனாக்கினார் அர்ச்சனா. இதற்காக சமூக வலைதளங்களில் ஓசி கேப்டன் என ட்ரோல் செய்யப்பட்டார் பாலாஜி.

இரண்டு பேர்
இந்நிலையில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் அதிக பாயிண்ட்ஸ்களை பெற்ற ரியோ நேரடியாக கேப்டன் ஷிப் டாஸ்க்கு தகுதி பெற்றார். இதனை தொடர்ந்து இந்த வாரம் முழுக்க அனைத்திலும் சிறப்பாக செய்த இரண்டு பேரை தேர்வு செய்ய கூறினார் பிக்பாஸ்.

சோம் ஆரி
இதில் சோம் 5 ஓட்டுகளையும் ஆரி, மற்றும் ரம்யா ஆகிய 2 பேரும் தலா 4 ஓட்டுக்களையும் பெற்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேருக்கும் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆரிக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தது.

ஆரியிடம் முகத்தை காட்டி
இதன் மூலம் இந்த வார கேப்டன் டாஸ்க்கில் ஆரி, ரியோ, சோம் ஆகிய மூன்று பேரும் இடம் பெற்றுள்ளனர். அர்ச்சனா வெளியேறியதில் இருந்து ரியோ, எதற்கெடுத்தாலும் ஆரியிடம் முகத்தை காட்டி வருகிறார்.
Recommended Video

கடுமையானதாக இருக்கும்
இதனால் ஆரியை கேப்டன் ஆகவிடக்கூடாது என்பதில் தீயாய் இருப்பார் என தெரிகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் இந்த வார கேப்டன்ஸி டாஸ்க் கடுமையானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











