Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
தனுஷ் என் மகன் இல்லையா?: கஸ்தூரி ராஜா விளக்கம்
சென்னை: தனுஷ் தனது மகன் என்று பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னுடைய நண்பர்களுக்கு நன்கு தெரியும் என இயக்குனர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தங்களின் மகன் கலையரசன் என திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்தனர். இதை தனுஷும், அவரது தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர்.
இந்நிலையில் அந்த தம்பதி தனுஷ் தங்களின் மகன் என்று கூறி மதுரை மாவட்டம் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து கஸ்தூரி ராஜா கூறுகையில்,
வருத்தம்
தனுஷ் என் மகன் அல்ல என வழக்கு தொடரப்பட்டுள்ள செய்தியை அறிந்து வருத்தமாக உள்ளது. இது பதில் சொல்லும் அளவுக்கு தகுதியான விஷயம் கிடையாது.
நண்பர்கள்
என்னை என் நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக நன்றாக தெரியும். என் மகன் தனுஷை சிறு வயதில் இருந்தே அனைவருக்கும் தெரியும்.
நீதித் துறை
நீதித்துறையின் பொன்னான நேரம் இது போன்ற பொய் வழக்குகளால் வீணடிக்கப்படுகிறதே என்று வருத்தமாக உள்ளது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. பல பிரச்சனைகளை நீதிமன்றம் தீர்த்து வைக்க வேண்டியுள்ளது.
வீண்
முக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைக்க விடாமல் நீதிமன்றத்தின் நேரம் இது போன்ற பொய் வழக்குகளால் வீணடிக்கப்படுகிறதே என நினைத்தாலே கவலையாக உள்ளது. நீதித்துறையை மதிப்பதால் வேறு எதுவும் கூற விரும்பவில்லை.