இரண்டாவது மனைவி கோபித்துக் கொண்டு போனதால் தற்கொலை செய்து கொண்டாரா சாய் பிரசாந்த்?
சின்னத் திரையில் பிரபல நடிகராக இருந்தவர், பெரிய திரையில் வளரும் கலைஞர் சாய் பிரசாந்த்.
இன்று அவரது திடீர் தற்கொலை கலையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சாய் பிரசாந்தின் இந்த மரணத்துக்குக் காரணம் அவரது மனைவியுடனான சண்டைதான் என்பது தெரிய வந்துள்ளது.

சாய் பிரசாந்த் ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவியைப் பிரிந்தவர். சமீபத்தில்தான் அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இரண்டாவது மனைவி சுஜிதாவுக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், பிரசாந்தைப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம் சுஜிதா. இதனால் மன உளைச்சல் அடைந்த பிரசாந்த், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுவில் விஷம் கலந்து குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











