Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகைக்கு திருமணம் நிச்சயமான நேரத்தில் மானபங்கம் ஏன்?: விசாரிக்கும் போலீஸ்
திருவனந்தபுரம்: நடிகைக்கு திருமணம் நடக்க உள்ள நேரத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கொச்சியில் பிரபல நடிகை ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு மலையாள திரையுலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருமணம்
நடிகைக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணம் நடக்க உள்ள நேரத்தில் திட்டமிட்டு மானபங்கப்படுத்தப்பட்டது ஏன் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லால்
நடிகையை அந்த கயவர்கள் காரில் இருந்து இறக்கிவிட்டதும் அவர் நேராக மூத்த நடிகரான லாலின் வீட்டிற்கு சென்று அவரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார்.
புகார்
நடிகை தனது வருங்கால கணவரிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து அவரின் அனுமதியுடனேயே போலீசில் புகார் அளித்ததாக லால் தெரிவித்துள்ளார்.
பிரித்விராஜ்
நடிகைக்கு நடந்த கொடுமை குறித்து அறிந்து முதலில் கோபப்பட்டு பொங்கியவர் நடிகர் பிரித்விராஜ். நடிகைக்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டார்.