Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
- News "தமிழ்நாட்டில் 4 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பதே அதிமுக போட்ட பிச்சை!" சிவி சண்முகம் தடாலடி பேச்சு
- Sports IPL - பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்ட தோனி.. ஸ்பின்னராக களமிறங்க போகிறாரா? என்னப்பா ஆச்சரியமா இருக்கு
- Automobiles டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
- Technology 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
கோவை சரளா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் தெரியுமா? வெளியான நெகிழ்ச்சி காரணம்!
சென்னை: நடிகை கோவை சரளா இதுவரை திருமணம் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாவும் இருப்பவர் நடிகை கோவை சரளா.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலொச்சி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
திரையுலகம் மூச்சுமுட்டி கிடக்கிறது.. ஒடிடி- ரிலீஸுக்கு சினிமா விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்பு!
கோவை ஸ்லாங்
750 படங்களுக்கு மேல் நடித்து வரும் நடிகை கோவை சரளா, நடிகர் கமலுடன் சதிலீலாவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். கோவை ஸ்லாங்கில் பட்டைய கிளப்பினார். பின்னர் கரகாட்டக்காரன் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது
காஞ்சனா சீரிஸ்
தொடர்ந்து ஏரளாமான படங்களில் நடித்துள்ள நடிகை கோவை சரளா தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். காஞ்சனா சீரிஸ் படங்களில் நடிகை கோவை சரளாவின் நடிப்புக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
தொகுப்பாளர்
விவேக், செந்தில், கவுண்டமணி, வடிவேலு ஆகிய நடிகர்களின் காம்பினேஷனில் கோவை சரளாவின் காமெடிகள் வேற லெவல். சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி சேனல்களிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
வெளியான காரணம்
இந்நிலையில் 58 வயதாகியும் நடிகை கோவை சரளா ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது. அதாவது கோவை சரளாதான் அவரது வீட்டிற்கு மூத்த மகளாம். அவருக்கு கீழ் நான்கு சகோதரிகள் ஒரு சகோதரர்.
திருமணம்
நடிகை கோவை சரளா, தனக்கு கீழ் பிறந்தவர்களுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்துள்ளார். அதோடு அவரது பிள்ளைகளை படிக்க வைப்பதில் இருந்து சகலத்தையும் கோவை சரளாதான் பார்த்து வருகிறாராம்.
கவலை இல்லை
அதோடு ஆதரவற்றோருக்கான ஆசிரமங்களுக்கும் அவர்தான் உதவி செய்து வருகிறார். தன் வாழ்நாள் முழுக்க அடுத்தவருக்கு உதவி செய்வதுதான் நோக்கம் என இருந்து வருகிறார் கோவை சரளா. மேலும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கவலை தனக்கு இருந்ததே இல்லை என்றும் கூறியுள்ளார் கோவை சரளா.
உயர்ந்து நிற்கும் சரளா
தன் உடன் பிறந்தவர்களுக்காக தான் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்து அவர்களின் குழந்தைகளையும் தன்னுடைய குழந்தைகளை போல் பாவித்து வரும் கோவை சரளாவை ரசிகர்கள் மனதில் தன்னுடைய நடிப்பை விடவும் ஒரு படி உயர்ந்து விட்டார்.